background img

புதிய வரவு

கனடாவில் கற்பழிப்பு வழக்கில் இந்திய டாக்டர் கைது

கனடாவில் உள்ள டொரன்டோ நகரைச் சேர்ந்தவர் அமிதாப் சவுகான் (32). இந்தியரான இவர் கனடா குடியுரிமை பெற்றவர். அங்கு இவர் டாக்டராக பணிபுரிகிறார். சம்பவத்தன்று தனது நண்பர் சுகந்தன் கைலாச நாதன் (32) என்பவருடன் ஒரு ஓட்டலுக்கு சென்றார்.

அங்குள்ள மது பாரில் 23 வயது பெண்ணை சந்தித்தனர். அவளுடன் பேசி நட்பை ஏற்படுத்தி கொண்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் மற்றொரு ஓட்டலுக்கு சென்றனர். அங்குள்ள பாரில் மது குடித்தனர். அப்போது அப்பெண்ணுக்கு கொடுத்த மதுவில் போதை பொருளை கலந்து கொடுத்தனர்.

போதையில் மயங்கிய அப்பெண்ணை அவர்கள் 2 பேரும் சேர்ந்து கற்பழித்ததாக தெரிகிறது. இதுகுறித்து டொரன்டோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.பிறகு அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இவர்கள் தங்களை ஜாமீனில் விடக்கோரி கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நாளை (23-ந்தேதி) நடைபெற உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts