background img

புதிய வரவு

புதன்கிரகத்தை படம் பிடித்த “நாசா” விண்கலம்

புதன் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளிமையம் “மெசஞ்சர்” என்ற விண்கலத்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பியது. சூரிய குடும்பத்தில் மிக தொலைவில் உள்ள இந்த கிரகத்தை கடந்த 17-ந் தேதி இந்த விண்கலம் சென்றடைந்தது. தற்போது இந்த விண்கலம் புதன் கிரகம் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அது தனது ஆய்வு பணியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தின் மேற்பரப்பை முதன் முறையாக போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. இதன் மேல் பகுதி மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வழக்கத்துக்கு மாறாக உள்ளது.

அதில் இருள் மயமான கதிர் வீச்சு காணப்படுகிறது. அது “டெபுசி” என்று அழைக்கப்படுகிறது. அவற்றின் கீழ் பகுதியும் இதற்கு முன்பு பார்க்காத அளவில் வித்தியாசமாக உள்ளது. இந்த தகவலை நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

இந்த படம் உள்பட மொத்தம் 363 போட்டோக்களை எடுத்து “மெசஞ்சர்” விண்கலம் அனுப்பியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்த பிறகு படிப்படியாக அவை வெளியிடப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts