background img

புதிய வரவு

அசாம் தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., அதிக அக்கறை: சுஷ்மா

கவுகாத்தி:"அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ.,வுக்கு கணிசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், அசாம் மாநில தேர்தலுக்கு முக்கியத்துவம் செலுத்த திட்டமிட்டுள்ளோம்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, நேற்று கவுகாத்தி வந்த பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அசாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களிலும் பா.ஜ.,வுக்கு கணிசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், அசாம் மாநில தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறோம். இங்கு எங்கள் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.தற்போது தேர்தல் நடக்கவுள்ள இந்த ஐந்து மாநிலங்களில், அசாமை தவிர மற்ற மாநிலங்களில் எங்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் இல்லை. இந்த தேர்தலில் அந்த நிலை மாறும். மேற்கு வங்கத்தில் ஒரு சில தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். கேரள சட்டசபையில் முதல் முறையாக எங்கள் கட்சி சார்பில், இந்த முறை எம்.எல்.ஏ.,க்கள் நுழைவர். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts