background img

புதிய வரவு

சோனியாவை ஏமாற்றிய தங்கபாலு : காங்கிரசார் ஆவேசம்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தங்கபாலுவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மயிலாப்பூர் தொகுதியில் ஜெயந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு தங்கபாலு வேட்பாளரானது காங்கிரசாரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 11 மணி அளவில் மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரசார் மாவட்ட பொதுச் செயலாளர் ரஞ்சன்குமார் தலைமையில் சத்தியமூர்த்தி பவனுக்கு திரண்டு வந்தனர். அலுவலக வாசலில் முற்றுகையிட்டு அமர்ந்தனர்.

அனைவரும் தங்கபாலுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். மயிலாப்பூர் தொகுதி மகளிர் காங்கிரஸ் நிர்வாகி சுசீலா என்பவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர்.

இளைஞர் காங்கிரசார் தயாராக வைத்திருந்த தங்கபாலு உருவ பொம்மைகளை தீ வைத்து எரித்தனர்.

சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் செங்கை செல்லப்பன் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மகா கவிபாரதி நகரில் நடந்தது.

இதன் பின்னர், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளர் உலகநம்பி கூறும்போது, சோனியாகாந்தியை ஏமாற்றி மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் தங்கபாலுவை தோற்கடிக்க வேண்டும். அவருக்கு எதிராக காங்கிரசார் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts