background img

புதிய வரவு

ஆந்திராவில் கடப்பா எம்.பி. தொகுதிக்கு மே 8-ந்தேதி தேர்தல்; ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் போட்டி

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மனைவி விஜயலட்சுமி மகன் ஜெகன் மோகன் ரெட்டி. காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதி எம்.பி. பதவியையும், விஜயலட்சுமி புலிவெந்துலா தொகுதி எம்.எல். ஏ. பதவியையும் ராஜினா செய்தனர்.

இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 8-ந்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடப்பா எம்.பி. தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும் புலிவெந்துலா சட்டசபை தொகுதிக்கு விஜயலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

விரைவில் இருவரும் வேட்புமனுதாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்.எஸ்.விவே கானந்தா ரெட்டி தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அவரது எம்.எல்.எல்.சி. பதவி காலம் முடிந்ததால் ராஜினாமா செய்தார்.

அவரை புலிவெந்துலா தொகுதியில் நிறுத்தி ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுபற்றி விவேகானந்தா கூறும்போது, காங்கிரஸ் மேலிடம் கட்டளையிட்டால் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts