background img

புதிய வரவு

வருமான வரி சோதனை; அனுஷ்காவை சிக்க வைத்த தெலுங்கு நடிகர்

‘அருந்ததீ’ படமம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. தொடர்ந்து சிங்கம், வேட்டைக்காரன் போன்ற படங்களில் நடித் துள்ளார். அனுஷ்காவின் ஐதராபாத் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் கணக்கில் காட்டாத தங்க நகைகள், ரொக்கம், சொத்து பத்திரங்கள் போன்றவற்றை கைப்பற்றினர். விசாகபட்டினம் வீட்டில் அனுஷ்காவுக்கு சொந்தமாக உள்ள வீட்டு பத்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.அந்த வீடு எப்படி வாங்கப்பட்டது என்று கேள்வி கேட்டனர்.

நாகார்ஜுனா, ரவிதேஜா, வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையால் அனுஷ்கா மிகவும் அதிர்ச்சியாகி உள்ளார். தன்னை குறிவைத்து திட்டமிட்டு இந்த சோதனை நடத்தப் பட்டதாகவும், தனக்கு எதிராக சதி திட்டங்கள் நடப்பதாகவும் நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறார்.

தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் ஒருவரின் வற்புறுத்தலால்தான் விசாகபட்டினம் பீச்சில் வீடு வாங்கியதாக கூறப்படுகிறது. அது சர்ச்சையை கிளப்பும் என்று எதிர்பார்க்க வில்லை. சில நாட்கள் பெங்களூர் வீட்டில் தங்கி கவலையை மறக்க முடிவு செய்துள்ளாராம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts