background img

புதிய வரவு

மொஹாலியில் தனுஷ் - ஐஸ்வர்யா!

அப்பா ரஜினியைப் போலவே ஏக கிரிக்கெட் ஆர்வம் மிக்கவர் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ். சென்னையில் இந்திய அணி விளையாடும் முக்கிய மேட்ச்களைப் பார்க்க ஸ்டேடியத்துக்கே போகும் அளவுக்கு தீவிர கிரிக்கெட் ரசிகை.

இந்த முறை இந்தியா - பாகிஸ்தான் ஆடும் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைக் காண கணவர் தனுஷிடன் மொஹாலிக்கே பறந்துவிட்டார் ஐஸ்வர்யா.

டெல்லியில் ஆளைப் பிடித்து எப்படியோ இரண்டு டிக்கெட்களைப் பெற்றுவிட்ட தனுஷும் ஐஸ்வர்யாவும் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி போனார்கள். இரவு டெல்லியில் தங்கிவிட்டு, காலையில் மொஹாலிக்குப் போய்விட்டனர்.

இது ஒரு சரித்திர முக்கியத்துவம் மிக்க போட்டி. கண்டிப்பாக நேரில் போய் பார்க்க வேண்டும் என முன்பே முடிவு செய்துவிட்டேன். தீவிர கிரிக்கெட் ரசிகையான ஐஸ்வர்யாவுடன் மாட்ச் பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவம்தான், என்று கூறினார் தனுஷ்.

ஐஸ்வர்யா கூறுகையில், கிரிக்கெட் ஒரு மதம் என்றால், சச்சின் அதன் கடவுள் என்ற ரசிகர்களின் கருத்துதான் எனக்கும். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். இந்தியா ஜெயிக்கனும், சச்சின் செஞ்சுரி போடணும். இதான் என் பிரார்த்தனை, என்றார்.

அதே பிரார்த்தனைதான் 100 கோடி இந்தியர்களுக்கும்!!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts