background img

புதிய வரவு

கேட்ச்”களை தவறவிட்டதால் தோல்வி அடைந்தோம்: பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் -அப்ரிடி

உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வி அடைவது நீடித்து வருகிறது. ஏற்கனவே 4 முறை தோல்வி அடைந்து இருந்தது. மொகாலியில் நேற்று நடந்த அரை இறுதியில் பாகிஸ்தான் அணி 29 ரன்னில் இந்தியாவிடம் தோற்றது. 5-வது முறையாக அந்த அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி கூறியதாவது:-

கேட்ச்களை தவறவிட்டதே தோல்விக்கு முக்கிய காரணம். எங்களைவிட இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். எங்கள் அணியின் எந்த ஒரு ஜோடியும் நிலைத்து நின்று ஆடவில்லை.

விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. வகாப் ரியாஸ் சிறப்பாக பந்து வீசினார். உமர்குல் பந்து வீச்சு சரியாக அமையவில்லை. எந்த ஒரு நபருக்கும் மோசமான நாள் அமையலாம். இந்தியாவுடன் மோதும் அரை இறுதி போட்டியை பாகிஸ்தானில் அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த தோல்விக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts