background img

புதிய வரவு

மக்கள் மனதை அறியாதவர் ஜெ. சுய விளம்பரம் தேடும் சீமான்: யுவராஜ்

மக்கள் மனதை அறியாத ஜெயலலிதா, அவர்களுக்கு தேவையான திட்டங்களை எப்படி நிறைவேற்றுவார் என்று ஈரோடு மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திமுக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதால், எங்கள் கூட்டணி சிறப்பான வெற்றியை பெறும். கடந்த 4 ஆண்டுகளாக கொடநாட்டில் ஓய்வு எடுத்த

ஜெயலலிதா, தமிழக திட்டங்களை குறை சொல்லுவது தவறு. ஜெயலலிதா எப்படி பொதுமக்களை சந்தித்து திட்டங்களை வழங்குவார். பொதுமக்களுக்கு என்ன தேவை என்று அவர்களுக்கு தெரியுமா?

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதாக கூறும் சீமான் சுயவிளம்பரத்துக்காக அவ்வாறு பேசி வருகிறார் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts