background img

புதிய வரவு

வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-விஜயகாந்த்துக்கு வடிவேலு 'ஐடியா'!

சென்னை: நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன் என்று விஜயகாந்த்தை காட்டமாக கேட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.அன்பழகனை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், பொது இடத்தில வச்சு தன்னோட தப்பை சுட்டிக் காட்டிய வேட்பாளரை நங்கு நங்குன்னு குத்துறியே. கேட்டா, என்கிட்ட குத்து வாங்கினா மகாராஜா ஆகிடுவான்னு சொல்ற. நான் சொல்றேன், பேசாம உன் கட்சிக்காரங்களை உன்னோட கல்யாண மண்டபத்துக்கு வர வச்சு வரிசையா நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து குத்து. எல்லாத்தையும் மகாராஜா ஆக்கி விட்டுப் போ.

அப்புறம் எதுக்குடா எலக்ஷனு. பேசாம கூட்டணிய கலைச்சுடு. பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா.

இஸ்லாமியப் பெருமக்களை தனது படங்களில் தீவிரவாதிகளாகத்தான் காட்டுவார் விஜயகாந்த். தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்வார். இஸ்லாமியர்கள் மீது பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் அவர் தேர்தலில் மட்டும் ஏன் உரிய வகையில் சீட் கொடுக்கவில்லை.

தன்னோட கட்சி சார்பா போட்டியிடும் 41 வேட்பாளர்கள் பெயரையும், ஒரு பெயர் விடாம சரியா சொல்லட்டும் விஜயகாந்த். நான் இந்த பிரசாரத்தை விட்டே போய்டுறேங்க என்றார் வடிவேலு.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts