background img

புதிய வரவு

மந்திரி சபையில் பாமக சேராது: ராமதாஸ்

தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரி சபை அமைந்தாலும் அதில் பா.ம.க. சேர்ந்து கொள்ளாது என, ராமதாஸ் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

முன்னதாக வேளாங்கண்ணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். கும்மிடிப்பூண்டி எல்லையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வரை பல மாவட்டங்களுக்கு கடந்த 15 நாட்களாக சென்று வந்துள்ளேன்.

அங்கெல்லாம் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் இந்த அலை ஜெயலலிதாவிற்கு எதிராக வீசப்போகிறது.

தமிழகத்திற்கு தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரிசபை அமையுமா என்ற கேள்விக்கு முதல் அமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரி சபை அமைந்தாலும் அதில் பா.ம.க. சேர்ந்து கொள்ளாது என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts