background img

புதிய வரவு

அஞ்சு வருஷம் தூங்கிட்டு அம்மா வராங்க! - நெப்போலியன் பாட்டு

திருவண்ணாமலை: அஞ்சுவருஷம் தூங்கிவிட்டு அம்மா வராங்க... என ராகம் போட்டுப் பாட்டுப் பாடி மக்களிடம் திமுகவுக்கு வாக்கு சேகரித்தார் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன்.

திருவண்ணாமலை, கீழ்ப்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளின் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் நெப்போலியன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய நெப்போலியன் ஒரு பாட்டுப் பாடினார்.

ஐந்து வருஷம் தூங்கிவிட்டு அம்மா வராங்க.
அம்மா வராங்க.

நான் அதைப் பண்ணுவேன்,
இதைப் பண்ணுவேன்னு சும்மா சொல்றாங்க.
நீங்க நம்பாதீங்க. இதை நம்பாதீங்க.

அரசு ஊழியரை அலற வைச்சாங்க.
அடி தட்டு மக்களையும் மிரள வைச்சாங்க.
புதுப் புது சட்டம் போட்டு பதற வைச்சாங்க.
இப்போது புளுகு மூட்டையை தூங்கி வராங்க...

என்று அவர் பாடிய பாட்டை மக்கள் ரசித்துக் கேட்டனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts