background img

புதிய வரவு

ஜெ. முதல்வராவார் என்று கூறவில்லை: வைகோ

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராவார் என்று நான் கூறவில்லையென ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பேசினார்.

ஈரோட்டில் ம.தி.மு.க., மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ம.தி.மு.க., பொது செயலர் வைகோ,

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் இந்தச் செயல் அந்தக் கட்சித் தொண்டர்களுக்கே மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்றுதான்

கூறினேன். ஜெயலலிதா முதல்வராவார் என்று கூறவில்லை. ம.தி.மு.க. உண்மையான ஜனநாயகக் கட்சி. இந்த முடிவின் மூலம் மக்கள் நல்லெண்ணத்தை கட்சி பெற்றுள்ளது.

இந்த காலகட்டத்தில் படித்தவர்களையும், கட்சி மீது நல்லெண்ணம் கொண்டவர்களையும் பெருமளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். ஜனநாயக முறைப்படி கட்சியை வலுப்படுத்த தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts