background img

புதிய வரவு

அரசு உணவு குடோனில் இருந்து 1 லட்சம் கோதுமை மூட்டை மாயம்

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் அரசுக்கு சொந்தமான மார்க்கெட்டிங் பெடரேசன் உணவு குடோன் உள்ளது. இங்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான கோதுமைகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 30 லட்சம் கோதுமைகள் மூட்டை இருந்தன.

இந்த குடோனை தனியார் நிறுவனம் ஒன்று பராமரித்து வந்தது. அரசு அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் அங்கு இருக்கும் கோதுமை மூட்டைகள் சரியான அளவில் இருக்கிறதா என்று அதிகாரிகள் கண்கெடுப்பு நடத்தினார்கள்.

அப்போது 30 லட்சம் மூட்டைகளுக்கு பதில் 29 லட்சம் மூட்டைகளே இருந்தன. 1 லட்சம் மூட்டைகளை காணவில்லை. இவை எப்படி மாயமானது என்று தெரியவில்லை. இது பற்றி குடோனை பராமரித்து வந்த நிறுவனம் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts