background img

புதிய வரவு

விவாகரத்துக்கு பின் சந்தோஷமாக இருக்கிறேன்-சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். விவாகரத்து செய்ததை வருத்தமாக நினைக்கிறீர்களா? என்று சோனியா அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் வாழ்க்கையில் எதற்கும் வருத்தப்பட மாட்டேன். எனது வாழ்க்கை இன்று வரை நிறைய படிப்பினைகளை தந்து கொண்டு இருக்கிறது. திரையுலக வாழ்க்கையில் செல்வராகவனுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டு உள்ளேன். அவர்தான் என்னை கண்டு பிடித்தார். நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வந்தார்.

ஆனால் சொந்த வாழ்க்கையில் எங்களுக்குள் ஒத்துப் போகவில்லை. எனவேதான் இப்போது வெளியே வந்து விட்டேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். வானம் படத்தில் நல்ல கேரக்டர் அமைந்தது. என் நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் குவிக்கின்றன. என் உடல் எடையை குறைத்து உள்ளேன்.

இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts