background img

புதிய வரவு

பொரிவிளாங்காய் உருண்டை

தேவையானவை:

கடலைப் பருப்பு - ஆழாக்கு
பயற்றம் பருப்பு - ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - கால் ஆழாக்கு
சம்பா கோதுமை - ஆழாக்கு
அரிசி - முக்கால் ஆழாக்கு
தேங்காய் மூடி - ஒன்று
சுக்கு - சிறு துண்டு
ஏலக்காய் - பதினைந்து
நெய் - ஒரு கரண்டி
வெல்லம் (தூள் செய்தது) - ஐந்து ஆழாக்கு

செய்முறை:

தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு ஏலக்காயை உரித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து பருப்புகள், கோதுமை, அரிசி, தேங்காய்த் துண்டுகள் எல்லாவற்றையும் வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

சுக்கை லேசாக சுட்டுப் பொடி செய்தும், ஏலக்காயையும் பொடி செய்தும் சேர்க்கவும்.

தூள் செய்த வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சூடாக்கி இளம் பாகு பதத்தில் வந்ததும், மாவைக் கொட்டி கம்பால் கிளறி விடவும்.

நன்கு கலந்ததும், கை பொறுக்கும் சூட்டில் கையளவு மாவை எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இதில் வறுத்த வறுகடலைப் பருப்பும், முந்திரிப் பருப்பும் கூட போட்டுப் பிடிக்கலாம். மேலும் சுவையாக இருக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts