background img

புதிய வரவு

பீகார் முதல்வருக்கு பில்கேட்ஸ் பாராட்டு

ஜெனிவா:பீகார் முதல்வர் நிதிஷ்குமார், குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக, உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, "மைக்ரோ சாப்ட்' நிறுவன தலைவர் பில்கேட்ஸ் தான், அதிக நிதியுதவி அளித்து வருகிறார்.உலக சுகாதார நிறுவனத்தின், 64வது ஆண்டு கூட்டம் ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பில்கேட்ஸ் பேசுகையில், "மருத்துவ வசதிகள் அதிகரித்து விட்டதாக கூறப்பட்டாலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாகத்தான் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் உலகிலேயே அதிகமாக உள்ளது."குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் சகாய விலையில் இந்த மருந்தை அளிக்க முன்வர வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், நைஜீரியா நாட்டின் போலியோ ஒழிப்பு திட்ட தலைவர் முகமது பேட்டும் சிறப்பாக செயல்படுகின்றனர்' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts