background img

புதிய வரவு

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஜித்குமார் (உண்மையான தல)


தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு தமிழ்விருச்சம் இணையதளத்தின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இப்பவும் எப்பொழுதும் உங்களை நலமுடம் வைத்திருக்க இறைவனிடம் பிராத்திக்கிறோம்.

வாழு .....    வாழவிடு....




எல்லை மீறும் அனுஷ்கா!

ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டாலே நடிகர், நடிகைகளின் அலட்டல் தாங்க முடியாது. அதிலும் நாலைந்து படங்கள் ஹிட்டாகிவிட்டால் சொல்லவா வேண்டும். அதுபோல நடிகை அனுஷ்காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக அவரின் மேலாளர் உட்பட பலரும் புலம்பி வருகின்றனர்.

ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா. முதல்படம் அவருக்கு வெற்றியை தராவிட்டாலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர் அருந்ததீ படத்தின் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட ஆரம்பித்து, இப்போது தமிழிலும், தெலுங்கிலும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் அம்மணியை படபூஜை, ஆடியோ ரிலீஸ் போன்ற விழாக்களுக்கு சென்னை வரும்போது, சம்பிரதாயத்திற்காகவாது பத்ரிகையாளர்களை பார்த்து ஹாய்...ஹலோ என்றாவது சொல்லுங்கள் என்று கூறிவருகின்றனர். ஆனால் அம்மணியோ அதெல்லாம் முடியாது. ரசிகர்களுக்காக திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன், பதிரிகையாளர்கள் முன் தோன்ற வேண்டும் என்றால் கூடுதல் பைசா ஆகும் பரவாயில்லையா? என்று அங்கும் கரன்சி பேசுகிறாராம். இதனால் அவரது மேனேஜர் உட்பட பலர், அனுஷ்காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக புலம்புகின்றனர்.

இருந்தாலும் அனுஷ்காவின் அலட்டல் கொஞ்சம் ஓவர் தான்!

தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழுவில் நடந்தது என்ன?

முதல்வர் கருணாநிதியின், 70 வயது பொது வாழ்க்கையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் போல ஒரு நெருக்கடியை அவர் சந்தித்ததில்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திகை தாக்கல் செய்யும் வரை தனது குடும்பத்தினரின் பெயர் அதில் சேர்க்கப்படாது என்று நம்பிக்கையில் அவர் இருந்தார்.

அதற்கு முன்தினம், தலைமைச் செயலகத்தில், நிருபர்கள் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்படுமா என்று ஒரு பெண் நிருபர் கேட்டதற்கு, "ஒரு பெண்ணாக இருந்து இதயம் இல்லாம் இப்படி கேட்கலாமா?' என்று கருணாநிதி கூறினார். கனிமொழியின் பெயர் சேர்க்கப்படுமா என்று கேள்வி கேட்பது கூட அவர் மனதை புண்படுத்துவதாக நினைத்தார். ஆனால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் மனைவி தயாளுவின் பெயர், அரசு சாட்சியாகவும், கனிமொழியின் பெயர், குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டதில் நிலை குலைந்து விட்டார். காங்கிரசின் மீது அவருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. கூட்டணி தேவையில்லை என்று முடிவு செய்யும் அளவுக்குப் போனார்.

அவருக்கு ஏற்பட்ட கோபத்தை ஸ்டாலின் போன்றவர்கள் எதிர்பார்க்கவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அப்பாவை சாமாதனப்படுத்தி, "கோபத்தில் அவசர முடிவை எடுத்து விடாதீர்கள்' என்று கூறும் நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. இருந்தாலும், கோபத்தை காங்கிரசுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார். அது ஒரு புறம் இருக்க, மகளை தைரியப்படுத்துவதில் அதிகம் செலவிட்டார். இதை, உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். "இந்த கூட்டத்துக்கு வருவதற்ரு கனிமொழி தயக்கம் காட்டினார். அதனால், நானே நேரில் சென்று, அவரை அழைத்து வந்தேன்' என்றார். மேலும், குடும்பத்தினர், "படாது பாடுபடுகின்றனர்' என்று வெளிப்படையாக் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு இதற்கு முழுக் காரணமாக இருந்தாலும், தனது குடும்பத்தில், ஸ்டாலினைத் தவிர, தயாளு, அழகிரி குடும்பத்தினர் கனிமொழியின் வீட்டுக்கு வந்து ஆறுதலாக இல்லாமல் இருந்தது பெரும் மன வருத்தத்தை அவருக்கு ஏற்படுத்தியது. குடும்பத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக, கட்சியைப் பயன்படுத்துகிறோம் என்று பேசிவிடக் கூடாது என்றும் கருதினார். அதை, "எனக்குள்ள சங்கடத்தை பெரிதுபடுத்தி, என்றைக்கும், யாருக்கும் கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டேன்' என்று உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் கருத்தைப் பெறுவதில் அவர் கவனமாக இருந்தார். உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் இதை கவனிக்க முடிந்தது. கூட்டம் கூடியதும், சிறிது நேரம் யாரும் பேசவில்லை. இந்த மவுனத்தைக் கலைக்க, "யாராவது பேசுங்க' என்று அவரே முன்வந்தார்.

"காரோட்டி' என்று அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், கூட்டத்தின் மவுனத்தைக் கலைத்துப் பேசினார். இவரைத் தொடர்ந்து நெல்லை மேயர் ஏ.எல்.சுப்ரமணியம் பேசினார். "வழக்கை எளிதில் வென்றுவிடலாம். குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் வலுவாக இல்லை' என்றார். இது, கருணாநிதிக்கு தைரியம் கொடுத்தது. ஆனால், அழகிரி போன்ற குடும்ப உறுப்பினர்கள் வாய் திறக்காமல் இருந்தது அவருக்கு சங்கடத்தை அதிகப்படுத்தியது. கட்சியினர் கொடுத்த தைரியத்தால், கொஞ்சம் தெம்பானாலும், காங்கிரசின் மீதான அவரது கோபம் பதிலடி கொடுக்காமல் போகாது என்பதை தெளிவாகத் தெரிந்தது. "தனக்கு வந்த சிக்கலை சட்டரீதியாக சந்தித்து வெளிவருவேன்' என்று தீர்மானமாக அதைத் தெரிவித்தார். கூட்டம் முடிந்து, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தபோது, "தலைவரின் மனநிலை எப்படி இருக்கிறது' என்று கேட்டபோது, கட்டை விரலை உயர்த்தி நாங்கெல்லாம் இருக்கும்போது அவர், "கிங்' என்றார்.

கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!

கமலை வைத்து அவ்வைசண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அடுத்து கமலை வைத்து ஒரு ‌காமெடி படம் ‌ஒன்றை இயக்க போகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க எண்ணினார் கே.எஸ்.ரவிக்குமார். இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. தமன்னாவும் நடிக்க ஓ.கே., சொல்லிவிட்டாராம்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் கமல் படம் என்றால் முத்தக்காட்சி இல்லாமல் இருக்காது. இந்தபடத்தில் அதுபோன்ற காட்சிகள் ஏதும் உள்ளதா என்று தமன்னா கேட்க, அது இல்லாமலா என்று பதில் வர, முதலில் சற்று தயங்கிய தமன்னா பிறகு ஓ.கே., சொன்னாராம். கூடவே ஒரு கண்டிஷனும் போட்டாராம். படத்தில் முத்தக்காட்சி இருப்பதால் தன்னுடைய சம்பளத்தை ரூ.1.25கோடியாக கேட்டாராம். தமன்னாவின் இந்த கண்டிசனை கேட்டதும் அதிர்ந்து போய் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பும், இயக்குநர் தரப்பும்.

செல்வம் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரையில் பவுர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று காலையில் குளித்து முடிந்து பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம்.

சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை இறைவனுக்கு படைத்து பூஜிப்பார்கள். இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பது தான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.

புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பவுர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை. இத்தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது.

இத்தினத்தில் அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விசேஷ அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம் பெறுகின்றது. சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

அம்மனுக்கு சிறப்பு பொருந்திய இச்சித்ரா பவுர்ணமி விரதநாளிலேயே எமனின் சபையில் நம்பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர், சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை, நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.
கள்ளழகர்:

எமதர்மனின் கணக்கரான சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பௌர்ணமி நாளில் தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

அன்னை மீனாட்சி, மதுரையில் சொக்கநாதரை மணந்ததும், சித்திரை மாத பவுர்ணமி தினத்தில் தான். கள்ளழகர் மதுரை வைகையாற்றில் சித்திரை மாத பவுர்ணமியில் விழா காண்கிறார்.

திருவண்ணாமலையில்:

சித்ரா பவுர்ணமி நாளில் தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர் என்கிறார் பிரபல ஜோதிடர் சதீஷ்குமார்.

திருமணத் தடை நீங்கும்:

ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் சித்ரகுப்தர் அதிபதி நவக்கிரகத்தில் கேது கிரகம் ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் காரகத்தின் அதிதேவதை சித்ரகுப்தர் ஆகிறார். கேது திசை, புத்தி, அந்தரம் மற்றும் கேதுவினால் வரும் தோஷங்கள், பூர்வ ஜென்ம பாவங்கள், தடைபடும் திருமணம், மக்கட்செல்வம் கிடைக்க, மனக்குழப்பம் அகல இவர் துணை புரிகிறார்.

ஆயுள்பாவ தோஷங்கள், கடன்கள், வழக்குகள் போன்ற கெட்ட பலன்கள் நீங்க, இவரை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சக்தி வாய்ந்த சித்ரகுப்தருக்கு என்று தனிக் கோயில் பழமை வாய்ந்த அற்புத திருக்கோவில் காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது. ஆருத்ரா உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடை பெறுகிறது.

விரத பலன்கள்:

சித்திர புத்திரனாரின் தீர்ப்பின் படியே கர்ம வினைகள் தொடரும் என்பதால் அவரை நினைத்து விரதமிருந்து வாழ்வைச் செம்மைப்படுத்தி நேரிய வழியில் செயற்பட மனப்பக்குவம் பெற இவ்விரதம் உதவுகின்றது. அதனால் போலும் `புண்ணியம் (தர்மம்) செய் புனிதனாவாய்' என்பதனை உணர்த்த அம்பாள் ஆலயங்களில் சித்திரபுத்தினார் கதை படித்து சித்திரைக் கஞ்சி வார்த்து தர்மம் செய்யத் தூண்டுகிறார்கள்.

மனதைச் செம்மைப்படுத்தி பகுத்தறிந்து தீயன தவிர்த்து, நல்லனவற்றை நாடி செயற்பட உறுதி கொள்ளும் இச்சித்திர புத்திரனார் விரதமானது மனித குலம் வாழ வேண்டிய சீரிய வழியைச் செப்பனிடும் ஒரு முக்கிய விரதமாகவும் கொள்ளப்படுகின்றது.

இறைவியாகிய அம்பாள், இயற்கையின் சக்தியாக தர்மத்தின் காவலாக, உலக இயக்கத்தின் ஆதாரமாக விளங்குவதாக இந்துக்கள் கொள்கின்றனர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்த அம்பாள் காலத்திற்கு காலம் பல்வேறு அவதாரங்களை எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

தாயாக இருந்து வாழ்வளிக்கும் அம்மனை இந்நன் நாளில் நம்பிக்கையுடன் தொழுது நின்றால் நிச்சயம் வாழ்வில் மலர்ச்சியும், எழுச்சியும் நம்மை நாடி வரும். துன்ப, துயரங்கள் தூரவிலகி விடும். மங்களம் பொங்கும் நல்வாழ்வு கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன.

அட்சய திருதியை போலவே இந்நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது. வெய்யிலுக்கு இதமாக தயிர் சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை ஏழைகளுக்கு தானமாக அளிப்பது வழக்கம்.

உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்ரா பவுர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய் ஒரு நோட்டுப் புத்தகம் பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

வெள்ளிக்கிழமை விரதம்

சித்திரை மாதம் சுக்கில பட்சத்து முதல் சுக்கிர வாரம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஒவ்வொரு சுக்கிர வாரமும் உமா தேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் சுக்கிரவார விரதம் எனப்படும். இதை வெள்ளிக்கிழமை விரதம் என்று கூறுவதுண்டு.

அரக்கர்களால் அவதிப்பட்ட தேவர்கள் அம்பாளை நோக்கி தொழுது வேண்டினர். அப்போது அம்பாள் அவர்களுக்கு அபயம் அளித்து அரக்கர்களை வதம் செய்தாள். தேவர்களையும் முனிவர்களையும் காத்து ரட்சித்தாள். இதை முன்னிட்டே அம்பாளை தொழும் சுக்கிர வார விரதம் இருக்கும் வழக்கம் ஏற்பட்டது.

இவ்விரத தினங்களில் ஒருபொழுது பகலில் உணவு கொள்ள வேண்டும். அம்பாளை பற்றிய பாராயணம், கதைகள் ஆகியவற்றை படிக்கலாம். மாலை பொழுதில் இல்லத்தில் அம்பாள் படத்தின் முன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பூஜிக்கலாம்.

கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து அம்பாளை வழிபடலாம். தேவிக்கு விளக்கு ஏற்றும்பொழுது ஐந்து வகை எண்ணையை பயன்படுத்த வேண்டும். 1) நெய், 2) விளக்கெண்ணெய், 3) வேப்பெண்ணெய், 4) இலுப்பை எண்ணெய், 5) தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஏற்றினால் தேவியின் அருள் சக்தி கிடைக்கும.

அம்பாளை வழிபட்டு சுக்கிர வார விரதம் மேற்கொள்ளுவதால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். மீனாட்சி கண்ணாலேயே கருணை செய்யும் மேன்மை மிக்கவள். விசாலாட்சி இகத்திற்கு இதமளிக்கும் சக்தியாவாள்.

காமாட்சி இரு கண்களிலும் கருணை பொழிந்து நலன்களை அருளும் சகல சக்தியும் வாய்ந்த தெய்வமாவாள். சுக்கிர வார விரதத்தால் சகல சக்தியும் வாய்ந்த அம்பாள் சகல சௌபாக்கியங்களும் அருள்வாள்.

3 நிமிஷம்... 3 லட்சம்! - இது தமன்னா ரேட்!!

மூணு நிமிஷன்தான் ஆடுவேன். ஆனா மூணு லட்சம் ரேட் ஆகும் பரவாயில்லையா/ என்று கேட்டு அதிர வைக்கிறாராம் நடிகை தமன்னா.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை தமன்னாவின் சம்பளம், நாட்டின் விலைவாசியை விட படுவேகமாக ஏறிக் கொண்டே போகிறது.

படத்துக்கான சம்பளத்தை இப்போது கோடிகளில் கேட்கும் தமன்னா, நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பெரிய தொகை வேண்டும் என்கிறாராம். நிகழ்ச்சிகளில் மேடையில் 3 நிமிடம் பாட ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங் கில் '100 சதவீதம் லவ்' என்ற படத்தில் தமன்னாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அதற்காக சிறப்பு மேடை அமைத்திருந்தனர். ஹீரோ நாக சைதன்யா விழாவுக்கு வரவில்லை. தமன்னா மட்டும் பங்கேற்றார்.

மேடையில் ஒரு பாட்டுக்கு ஆடும்படி தமன்னாவிடம் கேட்டு கொண்டனர். தமன்னாவும் ஆடினார். 3 நிமிடமே நடந்த இந்த நடன நிகழ்ச்சிக்கு தமன்னா ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டாராம்!

படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க நடிகர் நடிகைகள் பணம் வாங்கக் கூடாது என்று கூறிவரும் நிலையில் தமன்னா 3 நிமிஷத்துக்கு ரூ 3 லட்சம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“பால்கே” விருது பெற்ற பாலச்சந்தருக்கு நடிகர்கள் வாழ்த்து

இந்திய திரைப்பட துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தனது பங்கை வழங்கியதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாலச்சந்தருக்கு தங்க தாமரையும், ரூ. 10 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும். எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் படம் மூலம் வசனகர்த்தாவாக பாலச்சந்தர் அறிமுகமானார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ரஜினி, கமல், பிரகாஷ்ராஜ், விவேக் போன்றோரை திரையுலகுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார்.

“இரு கோடுகள்”, “பாமா விஜயம்”, “சர்வர் சுந்தரம்”, “அபூர்வராகங்கள்”, “அவள் ஒரு தொடர்கதை”, “தண்ணீர் தண்ணீர்”, “அச்ச மில்லை அச்சமில்லை”, “சிந்து பைரவி”, “அவர்கள்”, “தில்லுமுல்லு”, “அழகன்”, “ஜாதி மல்லி”, இந்தியில் “ஏக் துஜே கேலியே”, தெலுங்கில் “மரோசரித்திரா” போன்றவை பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த முக்கிய படங்கள்.

விருது பெற்றது குறித்து பாலச்சந்தர் கூறும்போது, சிவாஜிக்கு பிறகு எனக்கு இவ்விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதை தமிழ் ரசிகர்களுக்கு அர்ப் பணிக்கிறேன் என்றார். பாலச்சந்தருக்கு நடிகர்கள், இயக்குனர் கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமலஹாசன் கூறியதாவது:-

பாலச்சந்தருக்கு இவ்விருது தாமதமாக கிடைத்துள்ளது. விருது கமிட்டியில் நான் இருந்திருந்தால் “ஏக் துஜே கேலியே” படத்துக்கு முன்பே கொடுத்து இருப்பேன். விருது கொடுத்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கூறும்போது, இயக்குனர் பாலச்சந்தருக்கு “தாதா சாகேப் பால்கே” விருது கிடைத்ததன் மூலம் அவ்விருதுக்கு அழகும் அர்த்தமும் கிடைத்துள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த கவுரவத்தால் திரையுலகமே பெருமை பெற்றுள்ளது என்றார்.

நடிகர் விவேக் கூறும்போது, எங்களுக்கெல்லாம் பாலச்சந்தர் தான் பாஸ். அவர் படங்கள் மூலம் தான் நிறைய நடிகர்- நடிகைகளுக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. “சிந்து பைரவி”யில் சுகாசினி சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

அதே படத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இளையராஜாவுக்கு கிடைத்தது என்றார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறும்போது, பாலச்சந்தருக்கு கிடைத்த பெரிய கவுரவம் இவ்விருது என்றார்.

வேலாயுதம் ரிலீஸ் - பிறந்த நாள்: இலவச வேட்டி சேலை வழங்கும் விஜய்!

தனது வேலாயுதம் பட வெளியீட்டையும் பிறந்த நாள் விழாவையும் ஏழைகள் பயனடையும் வகையில் கொண்டாட முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.

எம் ராஜா இயக்கத்தில் விஜய் தற்போது வேலாயுதம், படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஜூன் 22-ம் தேதி, விஜய் பிறந்த நாளில் வெளியாகிறது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்துள்ளனர்.

வேலாயுதம் படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். விஜய் பிறந்த நாளில் படம் வெளியாவதால், விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் இதனை பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் வீண் செலவுகள் செய்யாமல், மக்களுக்குப் பயனுள்ள வகையில் இந்த விழா அமைய வேண்டும் என விஜய் கூறிவிட்டதால், அன்று ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் இலவச உணவு வழங்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். விஜய்யே இந்த உதவிகளை நேரில் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் அந்த நாளில் அறிவிக்க உள்ளார்களாம்.

'பேரை மாத்து...': விக்ரம் வீடு ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது

தெய்வத் திருமகன் படத்தின் பெயரை மாற்றக் கோரி நடிகர் விக்ரம் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் திருவான்மியூரில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டு முன்பு ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்நதவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விக்ரம் நடித்துள்ள தெய்வத் திருமகன் படத்தின் பெயரை மாற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

'மாத்து மாத்து தேவரய்யாவை இழிவுபடுத்து பேரை மாத்து' என அவர்கள் கோஷமிட்டபடி வீட்டை முற்றுகையிட முனைந்தனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்நத 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நல்ல முடிவு வரும்...

இதுகுறித்து பின்னர் கருத்து தெரிவித்த நடிகர் விக்ரம், "இதுபற்றி நான் கருத்து சொல்லி அவர்களின் கோபத்தை கிளற விரும்பவில்லை. இந்தப் பட பெயர் யாரையும் இழிவுபடுத்தாது. பெருமைதான் சேர்க்கும். சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி நல்ல முடிவு எட்டப்படும்", என்றார்.

பெண் போலீசிடம் நள்ளிரவு விசாரணை: டி.ஜி.பி, எஸ்.பி. மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் வள்ளி தன்னுடன் பணிபுரிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் செக்ஸ் தொல்லைகள் கொடுத்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பெண் ஊழியர்கள் மீதான செக்ஸ் புகார் தொடர்பாக உச்சநீதிமன்ற ஆணைப்படி கமிட்டி அமைக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

வள்ளி மீதான புகார் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரவு 7 மணிக்கு தொடங்கிய விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வள்ளியின் தரப்பு வக்கீல் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து வக்கீல் மணிகண்டன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் போலீசுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட வில்லை. இந்த நிலையில் குழு இருப்பது போன்று அதிகாரிகள் வள்ளியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு நோட்டீஷ் அனுப்பப்பட்டது.

ஆனால் அதற்கு பதில் வரவில்லை. இதையடுத்து டி.ஜி.பி.போலோநாத் மற்றும் விசாரணை செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, சூப்பிரண்டின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வார், துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி, தொண்டு நிறுவன தலைவி கலைவாணி, இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் அரசியில் பிரமுகர் ஒருவர் உள்பட 8 பேர் மீது ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வள்ளி தன்னை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக உள்துறை செயலாளருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் ஒரு புகார் மனு கொடுத்து அனுப்பினார். அந்த மனுவை சூப்பிரண்டு திருப்பி அனுப்பி விட்டதாகவும், இன்ஸ்பெக்டர் மூலம் அந்த மனுவை அனுப்பும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறுப்படுகிறது.

கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டும்: ஜெயலலிதா

சென்னை: 2ஜி ஊழலில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், அதில் தொடர்புடைய கருணா நிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

கொடநாட்டில் தோழி சசிகலாவுடன் ஓய்வெடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று விசாரித்து வரும் சிபிஐயின் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி .

இந்த ஊழலையே மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், இந்த ஊழல் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் கற்பனையில் உருவான கட்டுக் கதை என்றும் குறை கூறியிருக்கிறார் கருணாநிதி. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை நடவடிக்கைகளை, திராவிட அரசியலுக்கு எதிரான மேலாதிக்க சக்திகளின் சதி என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மோசமான செயல்பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கடுமையாக சாடியிருக்கிறார் கருணாநிதி.

தப்ப முடியாதபடி கடினமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தருணத்தில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது கருணாநிதியின் வாடிக்கை!.

குறிப்பிட்ட எந்தப் பெயரும் சுட்டிக் காட்டப்படவில்லை. தனி மனிதர், தனிப்பட்ட கட்சி அல்லது அமைப்பின் பெயர்கள் குறி வைக்கப்படவில்லை. வெறும் பொதுவான தூற்றுதல் தான்.

ஆனால், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது மிகப் பெரிய ஊழல். கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த ஊழலில் முழுவதுமாக மூழ்கி இருப்பதால், இந்த ஊழலில் இருந்து ஒதுங்கி இருப்பது என்பது கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இயலாத காரியம் ஆகும்.

இந்த ஊழலில் அடங்கியுள்ள அப்பட்டமான உண்மைகளில் சிலவற்றை நாம் காண்போம்.

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முதல் செய்திகள் மற்றும் இந்த ஊழலில் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தளபதி ஆ. ராசாவிற்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர் தரப்பு ஊடகங்களிலும் முதன் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வியில் தான் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கருணாநிதியின் பேரன்களில் ஒருவர், 28.4.2011 அன்று நடைபெற்ற திமுகவின் “உயர் மட்டக் குழு” கூட்டத்தில் ஊடகங்களை பொதுவாக கருணாநிதி தாக்கிய சமயத்தில் உடனிருந்தார் என்பது தான்.

2. ராசா மற்றும் இதர நபர்களுக்கு எதிரான வழக்குகள் எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஐயினால் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரால் இந்திய நாடாளுமன்றத்தில் தகுந்த ஆவணங்களுடனும், வலுவான வாதங்களுடனும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

3. அரசியல்ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், திமுகவிற்கு எதிரான கட்சி, ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. முக்கிய பங்காற்றுகின்ற, கருணாநிதியின் மகனும், பேரனும் மத்திய அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில் தான் சிபிஐ இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.

4. ஒரு வருடத்திற்கும் மேலாக தூங்கிக் கொண்டிருந்த இந்த ஊழல் வழக்கு தீங்கிழைக்கும் கும்பல் கூரை மேல் ஏறி நின்று கூக்குரலிட்டதன் காரணமாக முக்கியத்துவம் பெறவில்லை; உலகின் மிகப் பெரிய ஊழலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய புலனாய்வுத் துறையால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த விசாரணையை உச்ச நீதிமன்றமே முடுக்கி விட்டதன் காரணமாகத் தான் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது.

5. இந்த வழக்கில், சி.பி.ஐ. இதுவரை இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இன்னும் நிறைய குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது. இவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ, செவி வழிச் செய்தி அல்லது நாகரிகமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலோ நடைபெறவில்லை. மாறாக 80,000 பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின், ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

6. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டவர்கள் ஆ. ராசா மற்றும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டுமல்ல. இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் செல்வாக்கு படைத்த தொழில் குழுமத்தைச் சேர்ந்த மேலாண்மை இயக்குநர்களும், தலைமை செயல் இயக்குநர்களும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், இந்த ஊழலை மூடி மறைக்கும் விதமாக, “செல்வாக்கு படைத்த ஒரு குழுவினரின் அரசியல் சதுரங்க விளையாட்டு இது” என்று அபத்தமாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதி!.

நான் இப்பொழுது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன். கருணாநிதி அனுமதி அளித்திருந்தால், வாய்ப்பு கொடுத்திருந்தால், இந்தக் கேள்விகளை ஊடகங்களே அவரிடம் கேட்டிருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

1. கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 விழுக்காடு பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வியில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்?. இந்த டி.வி. சேனலில் இந்த அளவிற்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?.

2. தனிப்பட்ட முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா?, அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?.

3. 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வியில் எவ்வளவு முதலீடு செய்தார்?, இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?, தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா?, அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?.

4. கலைஞர் டி.வியில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சரகம் அனுமதி தராததையடுத்தே, கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?.

5. சர்ச்சைக்குரிய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பயனாளியான டி.பி. ரியால்டி குழுமத்திடம் இருந்து கலைஞர் டி.வி. 214 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. இந்தப் பணப் பரிமாற்றம் ஒரு தடவை நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பல முறை நடைபெற்று இருக்கிறது. இந்தப் பணம் ஏன் வாங்கப்பட்டது?. ராசாவால் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதற்கு பிரதிபலனாகத் தான் இந்தப் பணம் கலைஞர் டி.விக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இல்லையெனில், சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வியில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?.

6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன், ராசாவை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியவுடன், டி.பி. ரியால்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை 'உத்திரவாதமற்ற கடனாக' மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?.

7. திடீரென்று இந்தக் 'கடனை' வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.விக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?.

8. ஜெனிக்ஸ் எக்சிம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற போர்வையில், தன்னுடன் நெருங்கி பழகியவர்களின் நிறுவனமான துபாயைச் சேர்ந்த குழுமம், டி.பி. ரியால்டி நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் குழுமத்தில் இடம் பெற்றதற்கு கருணாநிதியின் விளக்கம் என்ன?.

9. கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கும், கருணாநிதிக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிமாற்றத்தில், ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பரிமாணங்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன?.

10. "கனிமொழி என் மகள் என்பதற்காக நான் ஆதரவளிக்கவில்லை; கனிமொழி தி.மு.கவின் விசுவாசமிக்க உண்மையான தொண்டர் என்ற முறையில்" ஆதரவளிப்பதாகத் தெரிவித்து, கட்சியை இழிவுபடுத்த தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கருணாநிதி!. இறுதி மூச்சுவரை கட்சிக்காக உழைக்கக் கூடியவர்கள், கட்சிக்காக தங்கள் உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கும் தொண்டர்கள் இது போன்ற பிதற்றலை நம்புவார்கள் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறாரா?.

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. ராசாவுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. கலைஞர் டி.வி. மற்றும் கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்லாமல், வரி ஏய்ப்பின் புகலிடமாக விளங்கும் வெளிநாட்டு வங்கிகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் பணத்தை குவித்து வைத்திருக்கின்றனர்.

கனிமொழியை மட்டும் குற்றப்பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சி.பி.ஐ. தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்பு உண்டு. அனைவரும் பயனடைந்துள்ளனர். நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், 2ஜி ஊழலில் தொடர்புடைய கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

'தைரியமா இருக்கனும்..': சிபிஐக்கு மன்மோகன் அறிவுரை!

டெல்லி: சிபிஐ யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சிபிஐக்கு டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள தலைமை அலுவலகத்தை இன்று திறந்து வைத்து பேசிய அவர்,

இந்தியாவின் புலனாய்வு துறைகளில் சிபிஐ முதன்மை துறையாக விளங்குகிறது. இதன் பணிகள் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும்.

முக்கிய வழக்குகளை கையாள்வது சிபிஐ அதிகாரிகளுக்கு ஒரு பரிசோதனை போன்றது. சிபிஐயின் நடவடிக்கைகள் அப்பாவிகளுக்கு துன்புறுத்தல் இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

சட்டத்தை மீறுபவர்கள், எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் ஊழல் புரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஐ தயங்கக் கூடாது. சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமம்.

தங்கள் பணிகளில் எந்த குறுக்கீடு வந்தாலும் அதற்கு சிபிஐ அதிகாரிகள் பயப்படக் கூடாது. தங்கள் கடமைகளை விருப்பு, வெறுப்பின்றி செய்ய வேண்டும். அதே நேரத்தில் நடுநிலை தவறக் கூடாது என்றார்.

விலங்கு மரபணு சேர்ப்பதால் அசைவமாகும் மரபணு காய்கறி - பழங்களுக்கு மத்திய பிரதேச அரசு தடை

சர்வதேச விதை நிறுவனங்கள் இயற்கையான காய்கறி - பழ விதைகளில் விலங்குகளின் உயிரணு மற்றும் சில வைரஸ் கிருமிகளை சேர்த்து மரபணு காய்கறி - பழங்களை உருவாக்குகிறார்கள். மரபணு காய்கறி - பழங்களில் விலங்குகளின் மரபணு சேர்வதால் அவை அசைவமாகி விடுகின்றன.

பெரும்பாலான மரபணு காய்கறி - பழங்களில் தவளை, எலி, கரப்பான் பூச்சி, பூனை, முயல் போன்ற விலங்குகளின் மரபணுக்கள் சேர்க்கப்படுகின்றன. காய்கறி - பழங்களை எலி, கரப்பான் பூச்சி போன்றவை சாப்பிடாமல் இருப்பதற்காக அந்த மரபணுக்களை சேர்க்கிறோம் என்று அமெரிக்க மரபணு தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

இந்த வகை காய்கறி - பழங்கள் சீக்கிரம் கெடாது. மாதக்கணக்கில் புத்தம் புதிதாக காய்த்த காய்கறி - பழுத்த பழம்போல் தோன்றும். இந்த வகை காய்கறி - பழங்களை சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறி உள்ளனர்.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகை பழங்களில் வாஷிங்டன், பிஜி, ஆஸ்திரேலியா என்று ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுவதாக அவர்கள் கூறினார்கள். அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்கப்படும் இப்பழங்கள் பற்றி உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் கிருஷ்ணா மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மரபணு மாற்று தரக்கட்டுப் பாட்டு குழு விஞ்ஞானிகள் பலர் மரபணு கத்திரிக்காயை பாதி அளவு பயிரிட அனுமதிக்கலாம். மேலும் இதுபற்றி சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் பரிந்துரை செய்தனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு மரபணு கத்திரிக்காய் மட்டும் அல்ல, மரபணு காய்கறி - பழங்கள் அனைத்துக்கும் திடீர் தடை விதித்துள்ளது. இதுபற்றி மாநில விவசாய மந்திரி ராம்கிருஷ்ணா குஷ் மரியா, ட்மோ நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மரபணு காய்கறி- பழங்களில் பல்வேறு விலங்கு களின் மரபணு சேர்க்கப்படுவதால் அவை அசைவமாகி விடுகிறது. நம் நாட்டில் சைவ உணவு சாப்பிடுவோர் அதிகம் உள்ளனர். இந்த மரபணு காய்கறி - பழங்களை அனுமதித்தால் நம் நாட்டில் உள்ள சைவ கலாசாரம் அடியோடு அழிந்து விடும் அபாயம் உள்ளது.

இதனால் மத்திய பிரதேசத்தில் மரபணு காய்கறி - பழங்கள் பயிரிடுவதற்கும் விற்பதற்கும் தடை விதித் துள்ளோம். மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மரபணு பயிர்கள் பற்றி மேலும் பரிசோதனை நடத்துவோம் என்று கூறி உள்ளார்.

நாங்கள் இதையும் எதிர்க்கிறோம். எங்களது மாநிலத்தில் மரபணு பயிர்களை பரிசோதனை செய்வதற்கு கூட அனுமதி தர மாட்டோம். இப்பயிர்களை பரிசோதனை செய்தால் நம் நாட்டில் இயற்கையான பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

மரபணு பயிர் விளைவித்த நிலத்தில் வேறு பயிர்களை விளைவிக்க முடியாது. இதனால் நான் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமே சுக்கு சமீபத்தில் அனுப் பிய கடிதத்தில் எங்கள் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் ஒருபோதும் மரபணு பயிர்களை பயிரிட தயாராக இல்லை.

அதை எங்கள் மாநிலத்தில் பயிரிட வைக்கும் முயற்சியை கைவிட்டு விடுங்கள். நாங்கள் மக்கள் நலனுக்கு உகந்த இயற் கையான காய்கறி - பழங் களை மட்டுமே பயிரிடுவோம்!! என்று குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காதலிக்க மறுத்த பெண்ணை விபசார அழகியாக சித்தரித்து இன்டர்நெட்டில் ஆபாச தகவல்-வாலிபர் கைது

சென்னை : தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணை விபச்சாரப் பெண்ணாக சித்தரித்து, இணையத்தளங்களில் அவர் குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட சென்னை சாப்ட்வேர் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஸ்ருதி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில், எனக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் எனக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் ஆபாச தகவல்கள் ஒரு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனது தோழிகளுக்கும், எனது உறவினர்களுக்கும் இந்த ஆபாச தகவல்கள் இணையத்தளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

என்னை ஒரு விபசார அழகியாக சித்தரித்து எனது செல்போன் நம்பரையும், எனது போட்டோவையும் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளன. இந்தத் தகவல்களை பார்த்து எனது உறவினர்களும் தோழிகளும் துக்கம் விசாரிப்பது போல என்னிடம் விசாரிக்கிறார்கள்.

இதனால் நான் மிகுந்த அவமானத்துக்குள்ளாகி கடுமையான மன உளைச்சலில் உள்ளேன். இந்த ஆபாச தகவல்களை அனுப்பிய நபர் யார் என்று கண்டுபிடித்து அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இது குறித்து `சைபர் கிரைம்' போலீசார் நடத்திய விசாரணையில் விருகம்பாக்கத்தில் உள்ள பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்து இந்த ஆபாச தகவல்கள் இணையத்தளத்தில் அப்லோட் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

அந்த நிறுவனத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு ஹெச்.ஆர். பிரிவில் வேலை பார்க்கும் பாலமுருகன் (32) என்பவர் தான் இதைச் செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் தந்த வாக்குமூலத்தில்,

நானும் அந்தப் பெண்ணும் அண்ணாநகரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் முதலில் வேலை பார்த்தோம். அப்போது அவரை நான் ஒருதலைபட்சமாக காதலித்தேன். ஆனால், எனது காதலை அவர் நிராகரித்துவிட்டார். வேலையில் இருந்தும் நின்று விட்டார். அவர் நடந்து கொண்ட விதம் எனது மனதில் மிகப் பெரிய காயத்தை உண்டாக்கியது.

அதற்கு பழிவாங்கும் வகையில் அவரைப் பற்றி ஆபாச தகவல்களை இணையத்தளத்தில் வெளியிட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.

பாலமுருகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். பாலமுருகன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

துனிசியா நாட்டில் சிறைகளில் இருந்து கைதிகள் 800 பேர் தப்பி ஓட்டம்

ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அதிபர் பென்அலிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். போராட்டத்தின் போது சிறைகளில் இருந்த சுமார் 11 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கடும் எச்சரிக்கைக்கு பின்னர் மேலும் 2 ஆயிரம் பேர் தானாக சரண் அடைந்தனர்.அதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

துனிசியாவின் மத்திய மேற்கு பகுதியில் கஸ்கரின் என்ற இடத்தில் மத்திய சிறை உள்ளது. இங்குள்ள 2 கைதிகள் அறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே தீயை அணைக்கும் பணியில் சிறை கைதிகள் ஈடுபட்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு 522 கைதிகள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

கஸ்கானில் இருந்து 150 கி.மீட்டர் தூரத்தில் காப்சா என்ற இடத்தில் மற்றொரு சிறை உள்ளது. அந்த சிறையை உடைத்து 300 கைதிகள் தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதை தொடர்ந்து ஜெயிலில் இருந்து தப்பி ஓடிய 35 பேர் ஒரு மணி நேரத்தில் பிடிபட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கற்பழிப்பு முயற்சியில் மாணவி கொலை-உடலை தூக்கில் தொங்கவிட்டு வாலிபர் ஓட்டம்

கோவை: பிளஸ்-2 மாணவியை கற்பழிக்க முயன்ற அவரது உறவுக்கார வாலிபர், அந்தப் பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

கோவையை அடுத்துள்ள துடியலூர் நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் மகள் தீபிகா (16). ஆர்.வி.நகரில் பாட்டி கனகலதா வீட்டில் தங்கி இருந்து பிளஸ்-2 படித்து வந்தார். தீபிகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சதீஷ் குமாருக்கும் (24) பழக்கம் இருந்து வந்தது.

முதலில் அத்தை மகன் என்ற உறவு இருப்பதாக நினைத்து சதீஷ்குமாருடன் தீபிகா பழகியுள்ளார். ஆனால், அவர் அத்தை மகன் அல்ல என்றும் உங்கள் இருவருக்கும் இடையே அண்ணன்- தங்கை உறவுதான் என்றும் தீபிகாவிடம் கூறிய கனகலதா, தகாத உறவை துண்டிக்குமாறு எச்சரித்திருந்தார்.

இந் நிலையில் நேற்றிரவு தீபிகாவின் அறைக்குள் நுழைந்த சதீஷ்குமார் தீபிகாவை கற்பழிக்க முயன்றுள்ளார். அவர் உடன்படாததால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கொலையை மறைப்பதற்காக தீபிகாவை தூக்கில் தொங்க விட்டுள்ளார்.

சத்தம் கேட்டு அந்த அறைக்கு ஓடிய கனகலதாவை தள்ளி விட்டுவிட்டு அறைக்கதவை வெளியிலிருந்து பூட்டிவிட்டு அங்கிருந்து சதீஷ்குமார் தப்பி ஓடிவிட்டார்.

அறைக்குள் சிக்கிய கனகலதா போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தப்பியோவிட்ட சதீஷ்குமாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வ‌ஞ்‌சிர‌ம் ‌பி‌ரியா‌ணி

தேவையானவை:

வ‌ஞ்‌சிர‌ம் ‌- 1/2 ‌கிலோ
பாசும‌தி ‌அ‌ரி‌சி - 1/2 ‌கிலோ
வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி - 5
ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌ஞ்‌சி இலை - தேவையான அளவு
இ‌ஞ்‌சி, பூ‌ண்டு வ‌ிழுது - 3 தே‌க்கர‌ண்டி
பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி - ‌1 க‌ப்
த‌‌யி‌ர் - 1 கப்
ப‌‌ச்சை‌மிளகா‌ய் - 4
‌மிளகா‌ய்‌த்தூ‌‌ள் - 3 தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு - தேவையான அளவு
எ‌ண்ணெ‌ய் - 1 க‌ப்
எலு‌மி‌ச்சை - 1

செ‌ய்முறை:

‌மீ‌ன் து‌ண்டுகளை சு‌த்த‌ம் செ‌ய்து உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் போ‌ட்டு ஊற‌விடவு‌ம். வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளியை நறு‌க்கவு‌ம்.

கு‌க்க‌‌ரி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் ஊ‌ற்‌றி ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌‌ஞ்‌சி இலை, பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம்.

வெ‌‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, இ‌ஞ்‌சி பூ‌ண்டு ‌விழுதை போ‌‌ட்டு வத‌க்கவு‌ம்.

த‌யி‌ர், ‌உ‌ப்பு, மிளகா‌ய்‌த் தூ‌ள், அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌கிள‌றி‌விடவு‌ம்.

த‌ண்‌ணீ‌‌ர் கொ‌தி‌‌க்கு‌ம் போது வ‌ஞ்‌சிர‌ம் ‌மீ‌ன் து‌ண்டுகளை பர‌ப்‌பி கு‌க்கரை மூடவு‌ம். ‌

ஒரு ‌வி‌சி‌ல் வ‌ந்தது‌ம் கு‌க்கரை இற‌க்‌‌கி எலு‌மி‌ச்சை‌சாறை ‌பி‌ழி‌‌ந்து பரிமாறவு‌ம்.

மீ‌ன் மசாலா

தேவையானவை:

மீன் - 4 துண்டுகள்
வெங்காயம் - 3 நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
இஞ்சி, பூண்டு ‌விழுது - 2 தே‌க்கர‌ண்டி
க‌றிவே‌ப்‌பிலை, மல்லி இலை - ‌சி‌றிது
மிளகாய்த் தூள் - 1 தே‌க்கர‌ண்டி
மிளகுத் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டை, லவ‌ங்க‌ம் - 1 சிறிது
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

மீன் துண்டுகளில் 1 துண்டு மீனை மட்டும் முள்ளை நீக்கி உ‌தி‌ர்‌த்து வைக்கவும்.

மீதமுள்ள 3 மீன் துண்டுகளில் கொஞ்சம் மிளகாய், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு ‌விழுது, உப்பு சேர்த்து பிரட்டி ஊற வை‌க்கவு‌ம்.

பின் மசாலா பிரட்டிய 6 துண்டுகளை தவா‌வி‌ல் போ‌ட்டு எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு பொரித்து எடுக்கவும்.

வாண‌லி‌யி‌ல் எண்ணை ‌வி‌ட்டு பட்டை, வெங்காயம், கறிவேப்பிலை, இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, த‌க்கா‌ளி, கொ‌த்து ‌ம‌ல்‌லி என அனை‌த்தையு‌ம் போ‌ட்டு நன்கு வதக்கவும்.

அ‌தி‌ல், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து மு‌ள் எடு‌த்த ‌மீனை சே‌ர்‌த்து 5 ‌நி‌மிட‌ம் வேக ‌விடவு‌ம்.

‌பிறகு பொரித்த மீன்களை சேர்த்து லேசாக‌க் ‌கிள‌றி இற‌க்கவு‌ம்.

முதுகுவலிக்கு வீட்டு வைத்தியம்!

இன்றைய அவசர யுக வாழ்க்கையில் முதுகுவலி பிரச்சனை என்பது அநேகமாக பெரும்பாலானோர் சந்திக்க கூடியதாகவே உள்ளது.

வயதானவர்கள் மட்டுமல்லாது நடுத்தர, அவ்வளவு ஏன் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் இளவயதினர் கூட இந்த முதுகுவலிககு தப்புவதில்லை.

நமது உடலின் பெரும்பாலான எடையை முதுகுதான் தாங்குகிறது என்பதால், அதிக உடல் பருமன உடையவர்களுக்கு இப்பிரச்சனையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.

சரியான நிலையில் உட்காரமல் இருப்பது, உடற் பயிறசி இல்லாமை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம், தசை இறுக்கம் போன்றவை முதுகுவலிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த முதுகுவலிக்கான நிவாரணமும், அதிலிருந்து விடுபடவுமான சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இங்கே:

நீங்கள் அதிக உடல் பருமன் உடையவராக இருந்தால், முதலில் உங்களது அதிகப்படியான எடையை குறையுங்கள்.அப்படி செய்தால்தான் உங்களது முதுகிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

முதுகுவலி ஏற்படும் சமயங்களில் பூண்டு போட்டு காய்ச்சிய எண்ணெய் அல்லது யூக்கலிப்ட்ஸ் தைலம் போட்டு நன்கு மசாஜ் செய்யுங்கள்.

ஒரு மேஜைக்கரண்டி தேனை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் முதுகுவலி குறையும்.

வைட்டமின் சி பற்றாக்குறையும் முதுகுவலிக்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே உங்களது உணவில் வைட்டமின் சி சத்து அடங்கிய பால், முட்டை, கீரை போன்ற உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உப்பு கலந்த சுடு நீரில் ஒரு டவலை நனைத்து பிழிந்து, அதனை முதுகில் ஒத்தடம் கொடுக்க வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஒரே நிலையில் (position) தொடர்ந்து பல மணி நேரம் இருப்பதை தவிருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.கூன் போட்டு உட்காராதீர்கள்.சரியான நிலையில் உட்காராமல் இருப்பதும் முதுகுவலியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

மாணவர்களுக்கான தேர்வு கால உணவுகள்!

பள்ளிகளில் தேர்வு காலம் தொடங்கிவிட்டாலே, பிள்ளைகளுடன் சேர்ந்து பெற்றோர்களுக்கும் டென்ஷன் தொற்றிக்கொள்ளும்.

தேர்வு பயத்தில் பிள்ளைகள் சரிவர சாப்பிடாமல் இருக்க, அவர்களை உரிய நேரத்தில் சாப்பிட வைப்பதற்குள் பெற்றோர்களுக்கு போதும் போதுமென்று ஆகிவிடும்.அதே சமயம் கெஞ்சி, கூத்தாடி தாங்கள் கொடுக்கிற சாப்பாடு சரியானதுதானா அல்லது எந்த வகையான உணவுகளை கொடுக்கலாம் என்ற கேள்வி பெற்றோர்களுக்கு எழும்.

கீழ்க்கண்ட உணவு வகைகளை கொடுத்தால், மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் ஏற்படும் மன் அழுத்தம் குறையும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்!

ஆரஞ்சுப்பழம்:

மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தினல அவர்களது வைட்டமின் சி அளவும் மிகவும் குறைந்து போய்விடுகிறது.இந்த வைட்டமின் சி இழப்பால் ஒரு சில நோய் தாக்குதலுக்கு ஆளாகுகிறார்கள்.

இதனை தடுக்க ஆரஞ்சுப் பழம் கொடுப்பது மிக நல்லது.ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமல்லாது, உடல் வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக் அமிலமும் ஏராளமாக உள்ளதால் அதனை தேர்வு நேரத்தில் அடிக்கடி சாப்பிட கொடுக்கலாம் என்கின்றனர் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

பசளிக்கீரை:

பசளிக்கீரையில் வைட்டமின் ஏ சத்துடன், ஏராளமான இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன.பசளிக்கீரையில் உள்ள இரும்பு சத்து, நல்ல நோய் எதிர்ப்பு திறனை உடலுக்கு அளிப்பதோடு, குழந்தைகளின் மூளை செயல்பாடுக்கு பலம் அளிக்கிறது. மேலும் அதிலுள்ள கால்சியம் குழந்தைகளின் எலும்பு வலுவாக வளர்ச்சியடைய உதவுவதோடு, அதிக நேரம் படிப்பதால் கண் அயர்ச்சி ஏற்படுவதையும் குறைக்கிறது.

நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோலம் பூண்டது!!

நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குமாரசாமி கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் கோலாகலமாக நடந்தது. இந்த மங்களகரமான நிகழ்ச்சி‌யையொட்டி அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பருத்தி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்திக்கும், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குமாரசாமி கவுண்டம்பாளையம் விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணப்பெண் ரஞ்சனி எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மணமகளின் சொந்த ஊரான குமாரசாமி கவுண்டம்பாளையத்தில் நேற்று (29-04-11) நடந்தது. இதில் இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முன்னதாக நடிகர் கார்த்தி வருவதையறிந்த கிராம மக்களும், ரசிகர்களும் அந்த‌ கிராமத்தில் குவிந்திருந்தனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நடிகர் கார்த்தி மணக்கப்போகும் பெண், தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் மகிழ்ச்சி அடைவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். கார்த்தி - ரஞ்சனி திருமணம் வரும் ஜூலை 8ம்தேதி கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என மணமக்கள் வீட்டார் தெரிவித்தனர்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!

சென்னை: ஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நான்கரை மணி நேரத்துக்குப் பிறகு வீடு திரும்பினார்.

ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் களைப்பாக காணப்பட்டார். இந்த நிலையில், அவர் நடிக்கும் 'ராணா' படத்தின் படப்பிடிப்பு , சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நேற்று காலை தொடங்கியது.

ரஜினிகாந்த் 'மேக்கப்'புடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் அவர் சாமி கும்பிடுவது போன்ற காட்சியை டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் முதலில் படமாக்கினார். அதன்பிறகு ரஜினிகாந்த் அங்கிருந்து காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர், கதாநாயகி தீபிகா படுகோனே மற்றும் மும்பை நடன அழகிகள் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி, ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள ஒரு அரங்கில் படமாக்கப்பட்டது.

வாந்தி

காரில் ஏறி சென்ற ரஜினிகாந்த் வழியில், பட அதிபர் ஏவி.எம்.சரவணன் அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். 12-30 மணி வரை அவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் ஜீரண கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார்.

மருத்துவமனையில் அனுமதி

உடனடியாக பிற்பகல் 1-45 மணி அளவில் அவரை சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவசர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தார்கள்.

சில நிமிடங்களில், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வந்தார். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி அவர் கூறுகையில், "அவர் நன்றாக இருக்கிறார். காலையில், 'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் ஏதோ நச்சுத்தன்மை இருந்திருக்கிறது. அஜீரணம் காரணமாக இங்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருக்கிறார்," என்றார்.

ரஜினிகாந்துக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, கிஷோர் ஆகிய இருவரும் சிகிச்சை அளித்தனர். அவருடைய உடல்நிலை பற்றி டாக்டர் கிஷோர் கூறுகையில், "ரஜினிகாந்துக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக அவர் வாந்தி எடுத்திருக்கிறார். இதனால் நீர்ச்சத்து குறைந்துவிட்டது. அவருக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவருடைய நாடி துடிப்பு சீராக உள்ளது. ரத்த அழுத்தமும், சுவாசமும் சீராக உள்ளன. பயப்படும்படி ஒன்றும் இல்லை", என்றார்.

டிஸ்சார்ஜ் ஆனார்

மாலை 6-15 மணி அளவில் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் வெளியே வந்தபோது, பத்திரிகை நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களைப் பார்த்து சிரித்தபடி கையசைத்தார். பின்னர் காரில் ஏறி, போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி

சென்னை: என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் எனது மனம் கவர்ந்த கருத்தாளர்களில் ஒருவருமான "சோலை'' எதை எழுதினாலும் அதை விருப்பு வெறுப்பின்றி ஒரே சீரான மனநிலையில் நான் படிப்பது வழக்கம். பாலும் நீரும் கலந்த கலவையில், தனக்கு வேண்டியதை மாத்திரம் எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை போன்ற நிலையினின்று என்றைக்கும் தடுமாறாதவன் நான்.

ஆதலால், தமிழகத் திரைப்படத் துறை குறித்து அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையை வார இதழ் ஒன்றில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொண்டாற்றியும் தொடர்ந்து தியாகங்கள் செய்தும் இயக்கத்தின் தருக்களாக வளர்ந்துள்ள என் பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரும், அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகிலும் பொருளீட்டி புகழ் ஈட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக்கணைகள் பாய்ச்சுவதை நாட்டுக்கு உணர்த்தி பகுத்தாய்ந்து; தெளிந்திடுக எனும் வேண்டுகோளோடு இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

எனது அருமை நண்பர்கள்

1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறேன். நான் திரைக்கதை வசனம் எழுதிய முதல் படங்களான அபிமன்யூ, ராஜகுமாரி ஆகியவற்றில் எனது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக தோன்றி இருக்கிறார்.

அவரை அடுத்து எனது அன்பு நண்பர் சிவாஜி "பராசக்தி'' படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். இப்படி எனக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகை தெளிவாக புரிந்தவர்கள் மறந்திருக்க முடியாது.

சினிமா துறைக்கு விடிவு காலம்

எழுத்து நடையின் வேகத்தில் சோலை, யாரோ ஒருவர், பெரியதோர் தயாரிப்பாளர் கோபத்தின் உச்சத்தில், இந்த ஆட்சி மாறினால்தான் சினிமா துறைக்கு விடிவு காலம் என்று ஆதங்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அவர் பெயரையும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் விமர்சிக்கிறார்கள் என்று சொல்லவும் சோலை தவறவில்லை.

என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு, அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். தற்போது படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தியேட்டர் கிடைக்கவில்லை

நான் எழுதி வெளி வந்துள்ள "பொன்னர்-சங்கர்'' திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை அலையாய் அலைந்துதான் தியேட்டர்களை பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர் விட்ட நிகழ்ச்சி எல்லாம் எனக்குத் தெரியும்.

கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர்'' திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே 2-ம் நாளே அந்த படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்ட செய்திகள் எல்லாம் சோலைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒரு மூதாட்டி "கருணாநிதியின் பேரன் பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி?'' என்று கேட்டதாக சோலை எழுதி இருக்கிறார்.

மற்றவர்களையும் பாருங்கள்

பாவம்; அந்தப் பாட்டிக்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும்,

ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் ரெட்டியார் சத்திரம் மூதாட்டிக்குத் தெரியாமல் போனதுதான் வேடிக்கை.

ஓட்டாண்டிகள்

அது மாத்திரம் அல்ல, கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதை முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள், எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாக ஆகி தெருவிலே நின்றார்கள் என்பதை எல்லாம் என் நண்பர் கவிஞர் கண்ணதாசன் எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும் திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ? ஆட்சி மாற வேண்டுமென்று துர்வாச முனிவரை போல கோபப்பட்ட தயாரிப்பாளருக்கு நான் நினைவூட்ட விரும்புவது, ஏன் அவரே பல முறை கொஞ்ச காலத்திற்கு முன்பு வரையில் பல மேடைகளில் சொல்லியதுதான். அவை வருமாறு:

சினிமா துறைக்கு அளித்த சலுகைகள்

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படங்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தகுதி வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களுக்கு அவை வெளியிடப்பட்டது முதல் 4 வாரங்கள் வரை கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டம் முதன் முதலாக 12.12.1996 அன்று தி.மு.க. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முன்பு இருந்த ஆட்சியில் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டுத்தான் வந்தது.

புதிய படங்களுக்குக் கேளிக்கை வரியை 54 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக 1989-ம் ஆண்டில் குறைத்த தி.மு.க. அரசு, 1.8.1998 முதல் அதை 30 சதவீதமாகவும், 2000-ல் 25 சதவீதமாகவும் குறைத்தது. 10 ஆண்டுகளுக்கு முன்வந்த திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக 1.8.1998 அன்று குறைத்ததுடன்; மொழி மாற்றுப் படங்களுக்கான கேளிக்கை வரியையும் பிற தமிழ்ப்படங்களுக்குக் குறைக்கப்பட்டது போல் குறைத்தது தி.மு.க. அரசு. இதே போல, இணக்க வரி விதிப்புகளும் அதற்கேற்றாற்போல் குறைக்கப்பட்டன.

கேளிக்கை வரி ரத்து

இந்த வரிக்குறைப்புகளின் மூலம் ஆண்டிற்கு ரூ.60 கோடி அளவிற்கான வரிச் சலுகைகளை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவில் 1998-ம் ஆண்டிலேயே தி.மு.க. அரசு வழங்கியது. விற்பனை வரிச் சட்டத்தின்படி, திரைப்படங்களுக்கான உரிமை மாற்றம் மீது 1.4.1986 முதல் 11.11.1999 வரை செலுத்த வேண்டிய வரியை தள்ளுபடி செய்தது.

அத்துடன் உரிமை மாற்றத்திற்கான விற்பனை வரியை 12.11.1999 முதல் 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. 1.4.2000 முதல் திரைப்படங்கள் குத்தகை மீதான 4 சதவீத விற்பனை வரி அறவே நீக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்கப்படுமானால், அதற்கு முழு கேளிக்கை வரி முழுமையும் ரத்து செய்யப்பட்டிருப்பதும் இந்த ஆட்சியிலேதான்.

படப்பிடிப்பு க் கட்டணம் குறைப்பு

தொல்பொருள் ஆய்வுத் துறையின்கீழ் உள்ள மற்றும் கலைச்சின்னங்கள் உள்ள இடங்களுக்குச் செலுத்தி வந்த படப்பிடிப்புக் கட்டணம் ஓரிடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 என்பதை ஆயிரம் ரூபாய் எனவும், ஏனைய இடங்களுக்கு ரூ.2,500 என்பதை ரூ.500 எனவும் 1996-ல் குறைத்தது தி.மு.க. அரசு. ராஜாஜி மண்டப படப்பிடிப்பு வாடகை தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை 2003-ல் ஒரு லட்சமாக உயர்த்தியது ஜெயலலிதா அரசு.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்குப்பின் அது ரூ.25 ஆயிரமாக குறைக்கப்பட்டது. அது, 25.6.2006 அன்று தி.மு.க. அரசினால் ரூ.10 ஆயிரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களில் வகை-1 என்ற பிரிவில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் ரூ.10 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.5 ஆயிரமாகவும், வகை-2-ன் கீழ்வரும் இடங்களுக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் ரூ.5 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.3,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு

சின்னத் திரைக்கான படப்பிடிப்புக் கட்டணங்கள் பெரிய திரைக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும் எனவும் 25.6.2006 அன்று ஆணையிட்டது தி.மு.க. அரசு. தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் சண்டைப் பயிற்சியாளர்கள் சண்டைக் காட்சியின்போது உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், செயல்பட முடியாத அளவிற்குக் காயம்பட்டு ஊனமடைய நேர்ந்தால் ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கும் திட்டம் 1996-ல் அறிமுகப்படுத்தி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

திரைப்படக் கலைத்துறை, சின்னத்திரை சார்ந்த தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் சிறுதாவூருக்கு அருகில் பையனூரில் 96 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையின் உழைப்பாளிகள் நலன்களைக் காத்திட திரைப்படத் துறையினர் நல வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 9.7.2008 அன்று "உளியின் ஓசை'' படத்தின் மூலம் எனக்குக் கிடைத்த கதை வசனத்துக்கான ஊதியம் ரூ.25 லட்சத்தில் வருமானவரி போக ரூ.18 லட்சம் திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

போர்க் கருவிகள்

நண்பர் சோலை, திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலரின் எண்ணத்தை, தன் கட்டுரையின் வாயிலாக தெரிவித்திருப்பதையொட்டி இந்த விளக்கத்தை அவர்களுக்கு தெரிவித்திட உதவியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டு திரையுலகத்திற்கு தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட ஒரு சில சாதனைகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.

இதை எல்லாம் செய்த குற்றத்திற்காகத்தான் இந்த ஆட்சி மாற வேண்டு மென்று திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலர் எண்ணுவார்களானால், அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு நண்பர் சோலைக்குத்தான் உண்டு.

கலைத் துறை, இலக்கியத் துறை இரண்டையும் என் அரசியல் இலட்சியப் போராட்டத்திற்குத் தேவையான போர்க்கருவிகளாக நான் கருதுகிறேன். சில பேர் லட்சிய போரின் பக்கம் அடியெடுத்து வைக்காமல், தலைவைத்துப் படுக்காமல் கலைத்துறை, இலக்கியத் துறைகளால் மட்டுமே ஈர்க்கப்பட்டு செயல்படுகிறார்கள். காரணமின்றி அவர்களில் சிலருக்கு என் மீது அழுக்காறும், அசூயையும் ஏற்படுவது இயல்புதான். அதற்காக நான் என்னுடைய லட்சியத்தை புதைத்து விட்டு, லட்சங்களைத் தேடி அலைய மாட்டேன்.

-இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

பெங்களூரு அணிக்கு "ஹாட்ரிக்' வெற்றி! * மீண்டும் வீழ்ந்தது யுவராஜ் அணி

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் விராத் கோஹ்லியின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மீண்டும் சொதப்பிய யுவராஜ் தலைமையிலான புனே அணி, தொடர்ந்து 5வது தோல்வியை சந்தித்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த 35வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் யுவராஜ் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
கெய்ல் அதிரடி:
பெங்களூரு அணிக்கு மீண்டும் ஒரு முறை புயல் வேக துவக்கம் தந்தார் கிறிஸ் கெய்ல். இம்முறை கம்ரான் கான் பந்துவீச்சை குறி வைத்தார். இவரது முதல் ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி சேர்த்து மொத்தம் 20 ரன்களை அள்ளினார். அடுத்த ஓவரில் வரிசையாக 2 சிக்சர், 1 பவுண்டரி அடிக்க, கம்ரான் கானை பார்க்கவே பாவமாக இருந்தது. ராகுல் சர்மா சுழலில் தில்ஷன்(15) சிக்கினார். தொடர்ந்து அசத்திய சர்மா பந்தில் கெய்ல்(49 ரன்) அவுட்டாக, புனே அணியினர் நிம்மதி அடைந்தனர்.
கோஹ்லி அரைசதம்:
இதற்கு பின் விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ் இணைந்து அசத்தினர். கம்ரான் கான், ராகுல் சர்மா பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய கோஹ்லி, உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். ரைடர் ஓவரில் கோஹ்லி 2 பவுண்டரி, டிவிலியர்ஸ் ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது. தாமஸ் வேகத்தில் டிவிலியர்ஸ்(26) வீழ்ந்தார். ஜெரோம் டெய்லர் ஓவரில் வீசிய போட்டியின் 18வது ஓவரில் கோஹ்லி 2 சிக்சர் அடித்தார். சவுரப் திவாரி தன் பங்குக்கு ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, மொத்தமாக 24 ரன்கள் எடுக்கப்பட்டன. அரைசதம் கடந்த கோஹ்லி(67) தாமஸ் பந்தில் அவுட்டானார். திவாரி 14 ரன்களுக்கு வெளியேறினார். பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. கைப்(8) அவுட்டாகாமல் இருந்தார்.
ரைடர் அரைசதம்:
கடின இலக்கை விரட்டிய புனே அணிக்கு ஜெசி ரைடர் நல்ல துவக்கம் தந்தார். ஜாகிர் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பெய்ன்(8) ஏமாற்றினார். மிதுன் ஓவரில் சிக்சர், பவுண்டரி அடித்த ரைடர் 51 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் சொதப்பினர். படுமந்தமாக ஆடிய மனிஷ் பாண்டே(19), வெட்டோரி சுழலில் சிக்கினார். பின் கேப்டன் யுவராஜ் அதிரடியாக ஆடினார். சயது முகமது சுழலில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். மீண்டும் பந்துவீச வந்த ஜாகிர் கான் வேகத்தில் யுவராஜ்(41) அவுட்டாக, நம்பிக்கை தகர்ந்தது. மன்ஹாஸ்(3) சோபிக்கவில்லை. அரவிந்த் வீசிய போட்டியின் கடைசி ஓவரில் உத்தப்பா 2 பவுண்டரி, சிக்சர் விளாசி ஆறுதல் தந்தார். புனே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. உத்தப்பா(23) அவுட்டாகாமல் இருந்தார்.
ஏற்கனவே டில்லி, மும்பை, மற்றும் சென்னை அணியிடம் வீழ்ந்த புனே அணி தொடர்ந்து 5வது தோல்வியை சந்தித்தது. லீக் சுற்றில் கோல்கட்டா, டில்லி, புனே அணிகளை வரிசையாக வென்ற பெங்களூரு அணி "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
ஆட்ட நாயகன் விருதை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார்.



முதலிடத்தில்...
நேற்று அரைசதம் கடந்த பெங்களூரு வீரர் விராத் கோஹ்லி, இத்தொடரில் அதிக ரன் எடுத்தவர்களுக்கான பட்டியலில் முதலிடத்துக்கு (7 போட்டி, 294 ரன்) முன்னேறினார். இதற்கான "ஆரஞ்சு' நிற தொப்பியை பெற்றார். இரண்டாவது இடத்தில் மும்பை அணி கேப்டன் சச்சின்(7 போட்டி, 276 ரன்) உள்ளார். தவிர, ஐ.பி.எல்., வரலாற்றில் ஆயிரம் ரன்களை கடந்தும் அசத்தினார் கோஹ்லி.
------
சிக்சர் "300'
பெங்களூரு வீரர் சயது முகமது சுழலில் புனே அணி கேப்டன் யுவராஜ் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். இது, இத்தொடரின் 300வது சிக்சராக அமைந்தது.





ஸ்கோர் போர்டு
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
கெய்ல் எல்.பி.டபிள்யு.,(ப)சர்மா 49(26)
தில்ஷன்(ப)சர்மா 15(19)
கோஹ்லி(கே)ஹர்பிரீத்(ப)தாமஸ் 67(42)
டிவிலியர்ஸ்(கே)சர்மா(ப)தாமஸ் 26(20)
திவாரி(கே)ஹர்பிரீத்(ப)டெய்லர் 14(8)
கைப்-அவுட் இல்லை- 8(5)
மிதுன்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 2
மொத்தம்(20 ஓவரில் 5 விக்.,) 181
விக்கெட் வீழ்ச்சி: 1-57(தில்ஷன்), 2-74(கெய்ல்), 3-140(டிவிலியர்ஸ்), 4-169(கோஹ்லி), 5-179(திவாரி).
பந்துவீச்சு: தாமஸ் 4-0-23-2, டெய்லர் 4-0-44-1, கம்ரான் 3-0-47-0, சர்மா 4-0-27-2, மன்ஹாஸ் 1-0-9-0, யுவராஜ் 2-0-10-0, ரைடர் 2-0-20-0.
புனே வாரியர்ஸ்
ரைடர்(கே)கைப்(ப)முகமது 51(34)
பெய்ன்(கே)வெட்டோரி(ப)அரவிந்த் 8(17)
பாண்டே(கே)திவாரி(ப)வெட்டோரி 19(23)
யுவராஜ்(கே)முகமது(ப)ஜாகிர் 41(23)
உத்தப்பா-அவுட் இல்லை- 23(17)
மன்ஹாஸ்(கே)கைப்(ப)கெய்ல் 3(5)
ஹர்பிரீத்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 9
மொத்தம்(20 ஓவரில் 5 விக்.,) 155
விக்கெட் வீழ்ச்சி: 1-35(பெய்ன்), 2-79(ரைடர்), 3-101(பாண்டே), 4-131(யுவராஜ்), 5-137(மன்ஹாஸ்).
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-33-1, அரவிந்த் 4-0-35-1, மிதுன் 4-0-26-0, வெட்டோரி 4-0-23-1, கெய்ல் 2-0-8-1, முகமது 2-0-26-1. .

உலகம் முழுவதும் 200 கோடி பேர் ரசித்த ராயல் திருமணம்

லண்டன்: பிரிட்டன் இளவரசர் வில்லியமுக்கும்(28) அவரது நீண்ட நாள் தோழியும், காதலியுமான கதே மிடில்டனுக்கும்(29) நேற்று, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சில், கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 1,900 வி.ஐ.பி., விருந்தினர்கள் நேரடியாக கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் வழியாக, 200 கோடி பேர் பார்த்து மகிழ்ந்தனர்.

வேல்ஸ் இளவரசர் சார்லஸ், மறைந்த இளவரசி டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம், தனது நீண்ட நாள் தோழியும், காதலியுமான கதே மிடில்டனை நேற்று கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்தைக் கண்டு களிக்கவும், மணமக்களை நேரில் பார்த்து வாழ்த்தவும், நேற்று முன்தினம் முதல், பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச் வரையிலான வழியில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். நேற்று காலை பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, ராணி எலிசபெத்துடன் மணமகன் வில்லியமும், தனது தந்தையுடன் மணமகள் மிடில்டனும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சுக்கு காரில் வந்தனர். அவர்களுக்கு முன்பாக, இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா, வில்லியமின் சகோதரர் ஹேரி ஆகியோர் வந்து காத்திருந்தனர். மணமக்கள் வந்த பின், பேராயர் ரோவன் வில்லியம்ஸ் இருவருக்கும் மண உறுதிமொழி செய்வித்தார். அந்த உறுதிமொழியில் வரக் கூடிய,"கணவருக்குக் கட்டுப்பட்டு' என்ற வார்த்தையை கதே மிடில்டன் சொல்லவில்லை. அதற்கு பதிலாக,"கணவரிடம் அன்பு செலுத்துவேன்' என்று மட்டுமே சொன்னார். தொடர்ந்து, வில்லியம், மிடில்டனின் மோதிர விரலில், தங்க மோதிரத்தை அணிவித்தார். அடுத்து, பைபிளில் இருந்து சில வாசகங்கள் படிக்கப்பட்டன. "பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால், இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று அறிவிக்கிறேன். ஆமென்' என்று பேராயர் தெரிவித்தார்.

மணமக்களை வாழ்த்தும் விதத்தில் பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, மணமகன் வில்லியம், கேம்பிரிட்ஜ் அரசர் என்றும், மணமகள் கதே மிடில்டன் கேம்பிரிட்ஜ் அரசி என்றும் ராணி எலிசபெத்தால் பட்டம் சூட்டப்பட்டனர். திருமணத் துக்கான ஆவணத்தில், இருவரும் கையெழுத்திட்டனர். பின்னர், மணமக்கள் சர்ச்சில் இருந்து வெளியே வந்து, அரச குடும்பத்துக்குச் சொந்தமான பாரம்பரியமிக்க சாரட் வண்டியில் பக்கிங்காம் அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதே வண்டியில் தான், 1981ல் சார்லஸ் - டயானா தம்பதிகள் ஊர்வலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழியெங்கும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், உற்சாகமாகக் குரல் எழுப்பியும், கையசைத்தும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சில இடங்களில், மணமக்கள் படம் நடுவில் பொறித்திருந்த தேசியக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. நேற்று இரவு பக்கிங்காம் அரண்மனையில், 650 வி.ஐ.பி.,க்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு, ராணி எலிசபெத் சிறப்பு விருந்தளித்தார். திருமண நிகழ்ச்சியை காலையில் இருந்தே, பி.பி.சி., உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின. வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சுக்கு வெளியே, நூற்றுக்கணக்கான பத்திரிகைகளின் நிருபர்கள் தங்கள் புகைப்படக் கலைஞர்களுடன் செய்தி சேகரித்தபடி இருந்தனர்.

யார் இந்த கதே மிடில்டன்? வில்லியமின் தாயார் மறைந்த டயானா, பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்தவர். ஆனால், தற்போது பக்கிங்காம் அரண்மனையின் மருமகளாகியுள்ள கதே மிடில்டன், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரிட்டனின் பெர்க்ஷைர் பகுதியைச் சேர்ந்த மிடில்டன், பிரிட்டன் ஏர்வேசில் அதிகாரியாக பணியாற்றியவர். இவர் தான் கதேவின் தந்தை. சில ஆண்டுகளுக்கு முன், மிடில்டன்,"பார்ட்டி பிசெஸ்' என்ற மெயில் ஆர்டர் நிறுவனத்தை துவக்கினார். இதில் பணம் கொட்டியது. இதனால், மிடில்டன் குடும்பம் கோடீஸ்வர குடும்பம் ஆனது.

தெருக்கள் எங்கும் "பார்ட்டி'கள்

* வில்லியம் - மிடில்டன் திருமணத்தைக் கொண்டாடும் வகையில், லண்டன் நகரில் உள்ள தெருக்கள், வீடுகள், "பப்'புகளில் கோலாகலமாக நேற்று 5,000 "பார்ட்டி'கள் கொண்டாடப்பட்டன.

* நேற்று நடந்த திருமணத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்காக, 8,500 பத்திரிகையாளர்கள் லண்டனில் குவிந்தனர். 180 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

* மிடில்டனின் சொந்த கிராமத்தில் நடந்த ஒரு பார்ட்டியில், இரண்டரை அடி உயர கேக், மக்களால் வெட்டப்பட்டு, திருமணம் கொண்டாடப்பட்டது.

* உலகம் முழுவதும் 200 கோடி பேர் நேரடி ஒளிபரப்பை கண்டுகளித்தனர். பல கோடி பேர் "ட்விட்டர்' "பேஸ்புக்' மூலம் திருமண நிகழ்ச்சியைப் பற்றி விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.

திருமண உடை ரகசியம்

* மணமகள் கதே மிடில்டன்னின் திருமண உடை பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரியத்தைப் பேணும் வகையில், வெளிர் சந்தன நிறத்தில் அவர் "கவுன்' எனப்படும் உடை அணிந்திருந்தார். அவரது உடையின் பின்புறம் மிக நீண்ட பட்டாடை பொருத்தப்பட்டிருந்தது. அதை தாங்கிப் பிடிக்க, இளம் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

* நீல வைரம் பொருத்தப்பட்ட கிரீடத்தை மிடில்டன் தன் தலையில் அணிந்திருந்தார். இந்த கிரீடம், 90 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ராணி மேரியால் அணியப்பட்டது.

* மணமகன் வில்லியம், தனது கவுரவ பதவியான அயர்லாந்து கர்னல் பதவிக்குரிய சிகப்பு உடையை அணிந்திருந்தார்.

* திருமணத்திற்கு அறிகுறியான மோதிரம் மாற்றும் நிகழ்ச்சியில், மிடில்டனில் விரலில் வில்லியம் மோதிரம் அணிவிக்கும் போது, சிறிது தடுமாறினார். பின் சமாளித்தபடி மோதிரம் அணிவித்தார்.

* இந்த மோதிரம் பரம்பரை பரம்பரையாக அரச குடும்பத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மோதிரத்தை, ராணி எலிசபெத் தனது பேரன் வில்லியமிடம் அளித்தார்.

வயதை மறைத்த "கதே'வின் உடை: பிரிட்டன் இளவரசர் வில்லியம்சிற்கும் அவரது நீண்ட நாள் தோழியான கதே மிடில்டனுக்கும் நேற்று பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அரச குடும்பத்தின் திருமணத்தில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், மணமகளின் திருமண உடை மீது சற்று கூடுதல் கவனம் இருக்கும். திருமணத்திற்கு முன்பே கதேவின் திருமண உடை குறித்து தகவல்கள் வந்தவாறு இருந்தன.

இது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்:

* கதே மிடில்டன் அரச குடும்பத்தின் பாரம்பரியமான வெள்ளை மற்றும் யானை தந்தம் நிறத்தில் கவுன் அணிந்திருந்தார்.

* ஐந்த மாதமாக உடையை தயார் செய்பவர்களுக்கான தேடல் நடந்தது.

* இறுதியாக அலெக்சாண்டர் மெக் குயின் நிறுவனத்தின் "கிரியேட்டிவ் டைரக்டர்' ஷாரா பட்டன் வடிவமைத்தார்.

* கவுனின் நீளம் 8.8 அடி.

* உடையுடன் இணைந்திருந்த வலை (லேஸ்) ராயல்ஸ் "ஸ்கூல் ஆப் நீடில் வொர்க்' என்ற இடத்தில் தயார் செய்யப்பட்டது.

* கதே அணிந்திருந்த "ஷூ' மெக்குயின் நிறுவனத்தின் பிரத்யேக தயாரிப்பு.

* பெற்றோர் பரிசளித்த வைர கம்மலை கதே அணிந்திருந்தார்.

* இந்த உடையில் கதேவை நேரில் பார்த்தாலும் போட்டோக்களில் பார்த்தாலும் வயதை கணக்கிட இயலாது. இதுவே இந்த உடையை அவர் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம்.

* கதே, கையில் வைத்திருந்த பூங்கொத்தை ஷான் கானோலி என்பவர் வடிவமைத்திருந்தார். லில்லி ஆப் வேலி, ஸ்வீட் வில்லியம் போன்ற நறுமண மலர்களால் இந்த பூங்கொத்து வடிவமைக்கப்பட்டது. லில்லி ஆப் வேலி என்றால் மகிழ்ச்சி பொங்குவது என்று அர்த்தம். அதே போல் ஸ்வீட் வில்லியம் என்றால் பாராட்டுதலுக்குரிய நடத்தை என்று அர்த்தம். இந்த பூங்கொத்தை "மிரில்' என்று அழைப்பார்கள். இதற்கு திருமணம் மற்றும் காதலின் சின்னம் என்று அர்த்தம்.

* 1945ல் விக்டோரியா மகாராணியால் உருவாக்கப்பட்ட பூந்தோட்டத்திலிருந்து "மிரில்' பூக்கள் பறிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியா? - கருணாநிதி பதில்

சென்னை: திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் முக ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படுவது பற்றகி திமுக பொதுக்குழு முடிவு செய்யும், என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முதல்வர் கருணாநிதி ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:

கருத்துக்கணிப்பில் வெற்றி

கேள்வி: சமீபத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. வெற்றிபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: பொதுவாக நான் கருத்துக் கணிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தக் கருத்துக் கணிப்பு சரியாக இருக்குமேயானால், தொடர்ந்து அடுத்தடுத்து இந்தப் பத்திரிகை சார்பில் செய்யப்படுகின்ற கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை வைப்பேன்.

கேள்வி: இதிலே எந்தெந்த விஷயங்கள் தி.மு.க.விற்கு ஆதரவாக வந்துள்ளன என்று நினைக்கிறீர்கள்?

பதில்: தி.மு.க. என்பது ஒரு இயக்கம். திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின் பால் மக்களுக்கு ஓர் ஆர்வமும், அக்கறையும் உள்ளது. இது வெறும் இயக்கமாக மாத்திரம் இல்லாமல் ஆளுங்கட்சியாக வந்து மக்களுக்கு அண்மைக் காலத்தில் பல சாதனைகளைச் செய்து முடித்திருக்கின்றது. நம்பகத்தன்மை வாய்ந்த கட்சியாக மக்களுக்கு இது இருக்கின்றது.

கூட்டணி அமைச்சரவையா?

கேள்வி: உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவைக்கு நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? கூட்டணி அமைச்சரவை தான் அமையுமென்று நினைக்கிறீர்களா?

பதில்: சூழ்நிலைக்கேற்ப எங்கள் கட்சி முடிவெடுக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூடாது என்றல்ல, கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே நடக்கின்றது.

கேள்வி: தேர்தலுக்கு முன்பு பல பேர் உங்கள் கட்சி ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அவதூறுகளைச் சொன்னார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீங்களே கேட்கும் போது அவையெல்லாம் அவதூறுகள் என்று சொல்லி கேட்டிருக்கிறீர்கள். அது அவதூறுகள் தான்.

சட்டரீதியாக சந்திப்போம்:

கேள்வி: மத்தியிலும் உங்கள் ஆட்சி தான் நடக்கிறது. இப்போது கருத்துக் கணிப்பில் நீங்கள்தான் வருவீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்கள் ஆட்சி மீது வழக்குகள் வருகிறதே, அதெல்லாம் எப்படி இருக்கும்?

பதில்: வழக்குகளை நாங்கள் சட்ட ரீதியாகச் சந்திப்போம்.

கேள்வி: மக்களுக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: இங்கே மேலே எழுதியிருக்கிறார்கள் பாருங்கள். "வாய்மையே வெல்லும்''. அதுதான் நான் சொல்ல விரும்பும் செய்தி.

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி?

கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் முதல்வராக தொடர்வீர்களா? அல்லது ஸ்டாலின் முதல்வராவாரா?

பதில்: அதெல்லாம் எங்கள் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள்.

கேள்வி: உங்களுடைய ஆசை என்ன?

பதில்: மக்கள் நன்றாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: இளங்கோவன் "கப்-சிப்'

அவிநாசி: ""தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 63 தொகுதிகளிலும் வெற்றி பெறுவர்,'' என, அவிநாசிக்கு வந்த, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார்.

அவிநாசியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில், காங்., கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும். அதேபோல், மேற்கு வங்கம், அசாம், கேரளாவிலும் காங்., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தமிழக காங்., தலைவர் தங்கபாலுவை மாற்ற வேண்டுமென்று புகார் சென்றுள்ளது. அதுகுறித்து கட்சி தலைமை ஆய்வு செய்து வருகிறது. அடுத்த தலைவர் யார் என்பதை, சோனியா முடிவு செய்து அறிவிப்பார். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து கேள்வி கேட்டதற்கு, "அது குறித்து தற்போது கருத்து கூற விரும்பவில்லை' என்றார். இளங்கோவனிடம், காங்., தொண்டர்கள், சட்டசபை தேர்தல் குறித்து சரமாரியாக புகார் கூறினர். அவர்கள் கூறுகையில், "அவிநாசி தொகுதியில், தி.மு.க.,வினர் வாசன் ஆதரவாளர்களை வைத்து மட்டுமே தேர்தல் பணிகளை செய்தனர்; எங்களை எதற்கும் கூப்பிடவில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்ட பிற அணியை சேர்ந்தவர்கள், ஒழுங்காக பணியாற்றவில்லை. எங்களை தொடர்ந்து புறக்கணித்தால், கட்சி பணிகளில் நாங்கள் எதற்கு ஈடுபட வேண்டும்' என்றனர். அதற்கு இளங்கோவன், "தேர்தல் முடிவுக்கு பின், அனைத்தையும் பேசி தீர்த்து கொள்ளலாம். பொறுமையாக இருங்கள்' என்றார். இதனால், தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர்.

சென்னை ஐகோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை

சென்னை ஐகோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை தொடங்கியது. விடுமுறைகால கோர்ட்டுகளில் நீதிபதிகள் யார்? யார்? விசாரணை நடத்துவார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எஸ்.விமலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:


சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1ந் தேதியில் இருந்து ஜுன் 5ந் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால கோர்ட்டுகளை நடத்துவதற்காக, விடுமுறை காலம் 3 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.


மே 1 15 தேதி முதல் பகுதி என்றும், மே 16 29 இரண்டாம் பகுதியாகவும், மே 30 முதல் ஜுன் 5 ந் தேதிவரை மூன்றாம் பகுதியாகவும் கோடைகால விடுமுறை பிரிக்கப்பட்டுள்ளது.


முதல் பகுதி விடுமுறை காலத்தில் மே 4, 5, 11, 12 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். அப்போது வழக்குகளை நீதிபதிகள் வி.தனபாலன், சி.எஸ்.கர்ணன், ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் விவகாரங்களையும் நீதிபதிகள் வி.தனபாலன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.தனபாலன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட வழக்குகளை நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


இரண்டாம் பகுதி விடுமுறை காலத்தில் மே 18, 19, 25, 26 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். இந்த நாட்களில் நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், சி.எஸ்.கர்ணன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


மூன்றாம் பகுதி விடுமுறை காலத்தில் ஜுன் 1, 2 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், சி.எஸ்.கர்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் பணி முடிந்ததும் ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


விடுமுறை கால கோர்ட்டுகளில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அவசரத்துக்கான காரணத்தை தனியாக காட்ட வேண்டும். விடுமுறைகால கோர்ட்டு காலை 10.30 மணியில் இருந்து மாலை 4.45 மணிவரை இயங்கும்.


மே 2, 3, 9, 10, 16, 17, 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் மனு தாக்கல் செய்யலாம். ஐகோர்ட்டு பதிவகம் காலை 10 மணி முதல் மாலை 4.45 மணிவரை இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

280 விமானங்கள் ரத்து; 27 கோடி நஷ்டம்!

டெல்லி: ஏற்கெனவே பெரும் நஷ்டம் மற்றும் கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், இப்போதைய விமானிகளின் ஸ்ட்ரைக்கால் ரூ 27 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுவரை 280-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விமானிகளின் வேலை நிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. வேலை நிறுத்தம் செய்து வரும் சங்கத்துடன் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் 300 பேரும் நேற்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

எங்களுக்கு உடல் நலம் இல்லை என்று விடுப்பில் சென்ற அவர்கள், 'எங்கள் இளம் விமானிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறோம்' என்று அறிவித்தனர்.

இதன் காரணமாக 280-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 5 நாட்களுக்கு விமானங்களுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ரூ.27 கோடி இழப்பு

இதனால் பல்லாயிரக்கணக்கான விமானப் பயணிகள், உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு போக முடியாமலும், ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை கொண்டு சேர்க்க முடியாமலும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

விமானிகளின் 3 நாள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 27 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சில தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றன.

சில விமானங்களில் கட்டணம் 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டது. முக்கிய வழித்தடங்களில் முன்கூட்டியே அனைத்து டிக்கெட்டுகளையும் ப்ளாக் செய்துவிட்ட சிலர், அதை எக்கச் சக்க விலையில் விற்று வந்தனர்.

புற்று நோயை கட்டுப்படுத்த, குணம் பெற மருத்துவத்துடன் யோகா

உடலின் சக்தியை, மன, ஆன்மீக சக்திகளுடன் யோகப் பயிற்சியின் மூலம் இணைத்து புற்று நோயை குணப்படுத்த முடியும் என்று ஹோமியோபதி மருத்துவர் ஷாஜி குடியாத் கூறியுள்ளார்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக உள்ள மருத்துவர் ஷாஜி வி.குடியாத், ஆளைக் கொல்லும் புற்று நோயை குணப்படுத்த யோகம், பிரார்த்தனை, மருத்துவம் ஆகிய மூன்றையும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் மார்பக, கருப்பை ஆகிய இடங்களில் ஏற்படும் புற்று நோயை இப்படிப்பட்ட முறையை கையாண்டு குணப்படுத்த முடியும் என்று குடியாத் கூறியுள்ளார்.

உடல் சக்தி, உடல், ஆன்மா ஆகியவற்றிற்கு இடையிலான பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய அறிவியல் முறையை உருவாக்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.

“ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் ஆளைக் கொல்லக் கூடிய எந்த ஒரு நோயையும் குணப்படுத்தலாம். சரியான உணவும், மனமும், சிந்தனையும் மிக முக்கியமானவை. சிந்தனை பெருமளவிற்கு உடலைப் பாதிக்கிறது. எனவே எதையும் நல்லதாக சிந்திப்பது நோயைக் குணப்படுத்த அவசியமாகிறது” என்று கூறியுள்ளார்.

கோடையை சமாளிக்கும் உணவு!

கோடை விடுமுறை வந்துவிட்டாலே நமது மனம் கொண்டாட்ட 'மூடு' க்கு மாறிவிடும். உறவினர்களோடு அரட்டை, கூச்சல் கும்மாளத்தோடு டி.வி.யில் படம் பார்ப்பது, சீட்டுக் கச்சேரி என களை கட்டும் கோடை விடுமுறையில், பல குடும்பங்களில் பிக்னிக்கும் கட்டாயம் இடம் பெறும்

ஆனால் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, பிக்னிக் பேக்க்குகளிலும் நம்மவர்களின் மிக விருப்பமான நொறுக்கு தீனிகளாக சிப்ஸ் பாக்கெட்டுகளும், சாக்லேட்டுகளும், தாகம் தணிக்கும் பானங்களாக குளிர்பானங்களும் பயண பைகளுக்குள் கட்டாயம் திணிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த இடத்தில்தான் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும்!

இதுபோன்ற சிப்ஸ் மற்றும் சாக்லேட்டுகளுக்கு பதிலாக பழங்கள்,காய்கறி சாலட்டுகள் போன்றவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

வழக்கமான உணவுகள் மற்றும் முறையான உடற்பயிற்சிகளோடு, மேற்கூறியபடி காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொண்டால், கோடை கொண்டாட்ட குதூகலத்தில், உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்கின்றனர்.

தாகத்தை தணிக்க தண்ணீர்:

கோடையில், குறிப்பாக வெயிலில் சுற்றி வந்தால் நாக்கு வறண்டு தாகம் அதிகமாக எடுப்பது சகஜம்தான். இந்த சமயத்தில் நம்மில் பலர் உடனடியாக தாகத்தை தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை வாங்கிக் குடிக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்களை வாங்கி குடித்தால், அது நமது உடலுக்கும் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, பர்ஸ்-க்கும் வேட்டு வைக்கிறது.

அதற்கு பதிலாக தாகத்தை தணிக்க தண்ணீரே போதுமானது.அது நமது உடலை குளுமைபடுத்துவதோடு,உடலில் நீரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.மேலும் தேவையற்ற கூடுதல்கலோரிகள் உங்கள் உடலில் சேருவதையும் அது தடுக்கிறது.செயற்கை குளிர் பானங்கள் நமது உடலில் தேவையற்ற அதிக கலோரிகளை உருவாக்கி விடுகிறது.

ஒருவேளை சிலருக்கு வெறும் தண்ணீரை அருந்த விருப்பமில்லாமல் இருந்தால், அதற்கு பதிலாக புதிதாக தயாரிக்கப்பட்ட எலுமிச்சை பழ ஜூஸ், இளநீர் அல்லது மோர் போன்றவற்றை அருந்தலாம். இவை கோடையின் சிறந்த தாகம் தணிப்பு பானங்கள் என்றே சொல்லலாம்.

பலாக்காய் பொரியல்

பெரிய தேங்காய் அளவு உள்ள பலாக்காய் ஒன்றை அறிந்து அதில் உள்ள பலாப்பிஞ்சுகளை எடுத்து சுமாரான அளவில் அரிந்து கொள்ளவும்.

பிறகு, ஆழாக்கு தண்ணீரில் போதிய அளவு உப்பும், மஞ்சள் பொடியும் போட்டு நன்றாக வேகவைத்து, தண்ணிரைக் கொடவிட்டு பலாப்பிஞ்சுகளை எடுத்துக் கொள்ளவும்.

கால் ஆழாக்குப் பயற்றம் பருப்பை நெந்யில் வறுத்து, அரை ஆழாக்கு தண்ணீர் வேகவிடவும்.

மிளகாய் இரண்டு, மிளகு ஆறு, மல்லி ஒரு தேக்கரண்டி, கொப்பரைத் துருவல் இரண்டு தேக்கரண்டி இவற்றை நெய்விட்டு வறுத்து நன்கு அரைத்து பின்னர், கால் ஆழாக்கு தண்ணீரில் கரைத்துப் பருப்பில் கொட்டி பலாப்பிஞ்சுத் துண்டுகளைப் போடவும்.

பலாப்பிஞ்சு நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும், தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து, நெய் இரண்டு தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் அரிந்த வெங்காயம் சிறிதளவு, சீரகம் அரை தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிது போட்டு சிவந்ததும் பலாப்பிஞ்சுகளை அத்துடன் கொட்டி, தேங்காயத் துருவல் கால் முடி போட்டு, மல்லி தழை போட்டு கிளறி இறக்கவும்.

முக நூல்

Popular Posts