background img

புதிய வரவு

ஸ்ரீநவசக்தி துர்க்கையம்மன் கோவில்

ஸ்தல வரலாறு::

குரோம்பேட்டையில் லக்ஷ்மிபுரம்-பச்சைமலை அடிவாரத்தில் ஸ்ரீநவசக்தி சுயம்பு துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் ஓர் விவசாயி தம் நிலத்தில் ஏர் உழுதுக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரது ஏர்க்கால் உடைந்து போக, அப்பகுதியில் இருந்த ஒரு கல்லில் இருந்து தொடர்ந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. இந்த அதிசயத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். ரத்தம் கசிந்தது வெறும் கல் அல்ல.

அன்னை நவசக்தி துர்க்கையம்மனின் சுயம்பு மேனி திருவுருவம் என்று தெரிய வந்தது ஆம்! அன்னையே இங்கு சுயம்புவாக எழுந்தளிருயுள்ளாள். அன்னையின் சுயம்புவாக எழுந்தருளியுள்ளாள்.

அன்னையின் சுயம்புத் திருமேனி ஆரம்பத்தில் சாதாரணமாக காட்சியளித்தாலும் பின்னர் அவளது அருட்கடாட்சத்தால் கண், காது, மூக்கு என்று ஒவ்வொன்றாய் தோன்ற ஆரம்பித்து தற்போது பூரண உருவுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து அருளாட்சி செய்து வருகிறாள்.

இவ்வன்னையை நினைத்து செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் வெகு சிறப்புடன் எந்தத் தடங்கலும் இன்றி நடை பெறுகின்றன என்பது பக்தர்களின் அனுபவமாக இருந்து வருகிறது.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts