background img

புதிய வரவு

புற்று நோயை கட்டுப்படுத்த, குணம் பெற மருத்துவத்துடன் யோகா

உடலின் சக்தியை, மன, ஆன்மீக சக்திகளுடன் யோகப் பயிற்சியின் மூலம் இணைத்து புற்று நோயை குணப்படுத்த முடியும் என்று ஹோமியோபதி மருத்துவர் ஷாஜி குடியாத் கூறியுள்ளார்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக உள்ள மருத்துவர் ஷாஜி வி.குடியாத், ஆளைக் கொல்லும் புற்று நோயை குணப்படுத்த யோகம், பிரார்த்தனை, மருத்துவம் ஆகிய மூன்றையும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் மார்பக, கருப்பை ஆகிய இடங்களில் ஏற்படும் புற்று நோயை இப்படிப்பட்ட முறையை கையாண்டு குணப்படுத்த முடியும் என்று குடியாத் கூறியுள்ளார்.

உடல் சக்தி, உடல், ஆன்மா ஆகியவற்றிற்கு இடையிலான பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய அறிவியல் முறையை உருவாக்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.

“ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் ஆளைக் கொல்லக் கூடிய எந்த ஒரு நோயையும் குணப்படுத்தலாம். சரியான உணவும், மனமும், சிந்தனையும் மிக முக்கியமானவை. சிந்தனை பெருமளவிற்கு உடலைப் பாதிக்கிறது. எனவே எதையும் நல்லதாக சிந்திப்பது நோயைக் குணப்படுத்த அவசியமாகிறது” என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts