background img

புதிய வரவு

மறக்க முடியுமா

12 ஆண்டுகள் காத்திருந்த தி.மு.க., : தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் பரிணமிக்கும் தி.மு.க., ஒரு காலத்தில், தேர்தல் கமிஷன் அங்கீகாரத்திற்காக காத்துக் கிடக்க வேண்டிய நிலையில் தான் இருந்தது. தி.மு.க., துவங்கி, 12 ஆண்டுகளில் 2 சட்டசபை தேர்தல்களில் பங்கேற்று, கணிசமான எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பே, அதற்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியது.
திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில், கடந்த 1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி கட்சி துவக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலராக அண்ணாதுரை ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தொடங்கிய குறைந்த காலத்திலேயே 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கட்சியை வளர்க்க போராட்டங்கள் அவசியம் என்று உணரப்பட்டது.
இந்த நேரத்தில் ஆறாம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தி.மு.க., போராட்டம் நடத்தியது. போராட்டத்திற்கு பணிந்த காங்கிரஸ் அரசு, இந்தி கட்டாய பாடம் அல்ல என்று அறிவித்தது. தி.மு.க.,வின் முதல் போராட்டமே வெற்றி பெற்றது.
கட்சி சிறப்பாக வளர்ச்சி அடைந்து வந்தாலும், 1952ல் நடந்த தேர்தலில் தி.மு.க., போட்டியிடவில்லை. 1957ல் நடந்த சட்டசபை தேர்தலில் 124 இடங்களிலும் லோக்சபாவிற்கு 11 இடங்களிலும் தி.மு.க., போட்டியிட்டது. இதில் 15 சட்டசபை தொகுதிகளிலும், 2 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இருந்த போதிலும், தி.மு.க.,வை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கவில்லை. 1962ல் நடந்த தேர்தலில் தி.மு.க., 50 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின்னரே, தி.மு.க., கட்சியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்தது. கட்சி தொடங்கி 12 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க.,வை தேர்தல் கமிஷன் அங்கீகரித்தது.
காங்கிரசுக்கு மாற்றாக உருவாகி, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என புகழ்பெற்ற தலைவர்களை கொண்டிருந்தும், தேர்தல் அங்கீகாரத்திற்காக தி.மு.க., காத்திருந்ததை, மற்ற கட்சிகள் தங்களுக்கு உதாரணமாக எடுத்துக் கொண்டு, அரசியல் களத்தில் தொடர்ந்து எதிர்நீச்சல் போடலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts