background img

புதிய வரவு

'தைரியமா இருக்கனும்..': சிபிஐக்கு மன்மோகன் அறிவுரை!

டெல்லி: சிபிஐ யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சிபிஐக்கு டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள தலைமை அலுவலகத்தை இன்று திறந்து வைத்து பேசிய அவர்,

இந்தியாவின் புலனாய்வு துறைகளில் சிபிஐ முதன்மை துறையாக விளங்குகிறது. இதன் பணிகள் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும்.

முக்கிய வழக்குகளை கையாள்வது சிபிஐ அதிகாரிகளுக்கு ஒரு பரிசோதனை போன்றது. சிபிஐயின் நடவடிக்கைகள் அப்பாவிகளுக்கு துன்புறுத்தல் இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

சட்டத்தை மீறுபவர்கள், எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் ஊழல் புரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஐ தயங்கக் கூடாது. சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமம்.

தங்கள் பணிகளில் எந்த குறுக்கீடு வந்தாலும் அதற்கு சிபிஐ அதிகாரிகள் பயப்படக் கூடாது. தங்கள் கடமைகளை விருப்பு, வெறுப்பின்றி செய்ய வேண்டும். அதே நேரத்தில் நடுநிலை தவறக் கூடாது என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts