background img

புதிய வரவு

2ஜி ஊழல்: ஜாமீன் கேட்டு ராசா மனு-விரைவில் விசாரணை

டெல்லி: 2ஜி ஊழல் விவகாரத்தி்ல் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவன இயக்குனர் பல்வா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரியாரா ஆகியோரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் 80,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ கடந்த 2ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கையை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யவிருக்கிறது. இதற்கிடையே சிறையில் இருக்கும் ஆ.ராசா ஜாமீனில் விடுவிக்கக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதேபோன்று பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகியோரும் ஜாமீன் கேட்டு தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெறவிருக்கிறது.

2ஜி வழக்கில் ஜாமீன் கேட்டு கார்பரேட் பிரமுகர்கள் மனு

2ஜி வழக்கி்ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கார்பரேட் நிறுவன பிரமுகர்கள் ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனு குறி்த்து பதில் அளிக்குமாறு சிபிஐயை நீதிமன்றம் கேட்டு்க் கொண்டுள்ளது.

ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா மற்றும் ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் உயர் அதிகாரிகளான கௌதம் டோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் இன்று முதன்முறையாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித் அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்க லலித் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி் சைனி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், அன்று சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts