background img

புதிய வரவு

205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்-சரத்குமார்

நெல்லை: சட்டசபைத் தேர்தலில் 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் சரத்குமார் போட்டியிடுகிறார். இன்று நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பிரகாசமாக உள்ளது. 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

ஓட்டுப் போடாத சரத்

சரத்குமாருக்கு சென்னையில்தான் ஓட்டு உள்ளது. ஆனால் தென்காசியில் போட்டியிடுவதால் அவர் தென்காசியில் இன்று முகாமிட்டு வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவைக் கண்காணித்து வந்ததால் சென்னை சென்று ஓட்டுப் போடவில்லை.

இதேபோல ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பூங்கோதை, நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோருக்கும் சென்னையில்தான் ஓட்டு உள்ளது. இவர்களும் தத்தமது தொகுதியில் இருந்ததால் வாக்களிக்கவில்லை.

வரலாறு காணாத வெற்றி-செ.கு.தமிழரசன்

அதிமுக கூட்டணியில், இரட்டை இலைச் சின்னத்தில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிடும் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் இன்று வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெறும். மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கும்.ஜெயலலிதா முதல்வராவது
உறுதி என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts