background img

புதிய வரவு

மக்கள் பதிலடி தருவார்கள்: மு.க.ஸ்டாலின்

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என, துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

விருதுநகர் மாட்டத்தில் திமுக கூட்டணி வேட்பளார்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மதுரையில் தங்கினார். பின்னர் காஞ்சிபுரம் புறப்படுவதற்கு முன்னர் அவரை மதுரை மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கலைஞர் 6வது முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்றார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற வீண் கெடுபிடிகளுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளதால்தான், ஜெயலலிதாவால் அதிமுக தேர்தல அறிக்கையை பற்றி பிரச்சாரம் செய்ய முடியாமல், வேறு எதையோப் பற்றி பேசி வருகிறார் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts