background img

புதிய வரவு

ரஜினி, கஜினி, டோணி ஒன்றாக இருந்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை-அமிதாப்

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'கஜினி' ஆமிர்கான் மற்றும் டோணி ஆகியோர் ஒரே இடத்தில் குழுமியிருக்கும்போது சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை என்று இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி குறித்து சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வர்ணித்துள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதாவது அவர் இந்திய அணி விளையாடுவதை டிவியில் பார்க்க மாட்டாராம். அப்படிப் பார்த்தால் இந்தியா தோற்று விடும் என்பது அவரது நம்பிக்கை. ஆனால் நேற்று அவரால் அப்படிப் பார்க்காமல் இருக்க முடியவில்லையாம்.

போட்டியை முழுமையாக வீட்டில் உட்கார்ந்து டிவியில் பார்த்துள்ளார் அமிதாப். அந்த அனுபவத்தை ட்விட்டரில் இப்படிக் கூறியுள்ளார் அமிதாப்.

என்னால் டோணி தலைமையிலான இந்திய அணி விளையாடியதை பார்க்காமல் இருக்க முடியவில்லை. 2 விக்கெட் இழப்புக்கு 33 ரன்களை இந்தியா எடுத்திருந்தபோது ஏன் டிவி முன்பு உட்கார்ந்தோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் போகப் போக என்னால் எழுந்திருக்க முடியவில்லை. டோணி அடித்தாரே அந்த கடைசி சூப்பர் சிக்ஸ், அதை விளக்கவே வார்த்தை இல்லை.

அதுசரி, ஒரே இடத்தில் ரஜினி, கஜினி (ஆமிர்கான்), டோணி ஆகியோர் இருந்தால், சாதிக்க முடியாதது என்று எதுவுமே கிடையாதே!.

ஏதோ நாடே சுதந்திரமடைந்தது போல இந்த வெற்றியை மக்கள் கொண்டாடியது என்னைக் கவர்ந்துள்ளது. என்ன ஒரு ஆட்டம், என்ன ஒரு ஆட்டம். அட்டகாசமான போட்டி. என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார் அமிதாப்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts