background img

புதிய வரவு

சீனா: லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு மரண தண்டனை

சீனாவில் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில்,அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள லியோனிங் மாகாண மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் துணைத் தலைவராக இருந்தவர் சாங் யோங்(56).

கடந்த 2000 முதல் 2009 வரை இவர் பதவியில் இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 23 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் 720 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அரசு ஒப்பந்தங்களையும் பணி உயர்வையும் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.சட்ட விரோதமாக அவர் சம்பாதித்த அனைத்தும் அரசால் கைப்பற்றப்பட்டன.பீஜிங் நகர இரண்டாவது இடை நிலை மக்கள் நீதிமன்றம் அவரது வழக்கை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts