background img

புதிய வரவு

துணை கலெக்டர் கொலை:கலப்பட கும்பலைச் சேர்ந்த 180 பேர் கைது

மகாராஷ்ட்ராவில் துணை கலெக்டர் ஒருவர் பெட்ரோல் கலப்பட கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கலப்படம் செய்யும் மாஃபியா கும்பலைச் சேர்ந்த 180 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாவட்ட துணை கலெக்டர் யஷ்வந்த் சோனாவானே என்பவர், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் கலப்பட கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்ட்ரா அரசின் கெஜட்டட் அந்தஸ்திலான அதிகாரிகள் சங்கம் இன்று வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.

இதற்கு மற்ற ஊழியர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.அதன்படி இன்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் 17 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இதனால் மாநிலம் முழுவதும் அரசு பணிகள் முடங்கின.பல அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் எதிரொலியாக கலப்பட மற்றும் எண்ணெய் கடத்தல் கும்பலை பிடிக்க மாநில அரசு உத்தரவிட்ட்டதைத் தொடர்ந்து, 200 க்கும் அதிகமான எண்ணெய் கலப்படம் நடக்கும் இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது மாஃபியா கும்பலைச் சேர்ந்த 180 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி ரகுவன்ஷி தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts