background img

புதிய வரவு

பிரணாப் தலைமையில் 8ஆ‌ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக ம‌த்‌திய ‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் ‌முக‌ர்‌ஜி தலைமை‌யி‌ல் வரு‌ம் 8ஆ‌ம் தே‌தி அனை‌த்து‌க் க‌ட்‌சி கூ‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒது‌க்‌கீ‌ட்டி‌ல் ஏ‌ற்ப‌ட்ட முறைகேடு கு‌றி‌த்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியது.

இந்நிலையில் நாடாளுமன்றம் முடக்கம் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்தும், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக, அவைத்தலைவரும், நி‌தியமை‌ச்சருமான பிரணாப் முகர்ஜி வரு‌ம் 8ஆ‌ம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts