background img

புதிய வரவு

வெற்றிக்கு சச்சினின் பங்கு முக்கியமானது - சாந்து

பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வெற்றியில் சச்சின் டெண்டுல்கரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற 'கபில்ஸ் டெவில்ஸ்' அணியின் முன்னாள் மித வேகப்பந்து வீச்சாளர் பல்வீந்தர் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு உலக சாம்பியனான கபில்தேவ் தலைமை இந்திய அணியைக் காட்டிலும் தற்போது மகேந்திர சிங் தலைமை இந்திய அணி அனுபவம், திறமை இரண்டிலும் சிறப்பாகவே உள்ளது.

மேலும் தோல்வி பெறும் நிலையிலிருந்து வெற்றிக்கு ஆட்டத்தைத் திருப்பும் யுவ்ராஜ், யூசுஃப் பத்தான், தோனி ஆகியோர் அணியில் இருக்கின்றனர்.

டெண்டுல்கர் தற்போது இந்த உலகக் கோப்பையை வெல்வதில்தான் தன் முழு கவனத்தையும் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

அவர் நன்றாகத் தன்னைத் தயார் செய்து கொள்வார், அவர் எப்போதும் உழைப்பதில் வல்லவர். இவ்வாறு பல்வீந்தர் சிங் சாந்து கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts