background img

புதிய வரவு

ஆந்திர அரசு மீது நடிகை ரோஜா தாக்கு; மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-


ஆந்திராவில் தற்போது காங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி குறைந்து விட்டது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அரசு கவிழ்ந்து விடும். சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தலை சந்திக்க பயம் இருப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மறுக்கிறார்.


ஆந்திராவில் எப்போது தேர்தல் நடத்தினாலும் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. ஆந்திர அரசு தற்போது மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது.


ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட தயக்கம் காட்டுகிறது. ஆந்திராவில் அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு 3-வது இடம் தான் கிடைக்கும். இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts