background img

புதிய வரவு

பயிற்சி‌யி‌ல் குண்டு வெடித்து 5 காவல‌ர்க‌ள் படுகாயம்

திரு‌‌ச்‌சி ஆயுத‌ப்படை மைதான‌த்த‌ி‌ல் நடைபெ‌ற்ற ப‌யி‌ற்‌சி முகா‌மி‌ல் கு‌ண்டு வெடி‌த்து ஐ‌ந்து காவல‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர்.


திருச்சி மாநகர ஆயுதப்படை காவல‌ர்களு‌க்கு ஒவ்வொரு ஆ‌ண்டு‌ம் வருடந்தார நினைவூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.


பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சி இ‌ன்று காலை நடந்தது. இதில் பெண் காவல‌ர்க‌ள் உள்பட 120 காவல‌ர்க‌ள் பயிற்சி பெற்றனர். அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை முறியடிப்பது எப்படி? கலவரத்தை கண்ணீர் புகை குண்டு வீசி கலைப்பது எப்படி? உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.


அப்போது கலவரத்தை அடக்க பயன்படுத்தப்படும் கண்ணீர் புகை குண்டை ஒரு காவல‌ர் வீசியபோது எதிர்பாராத விதமாக தரையில் உருண்டு பயிற்சியில் ஈடுபட்ட காவல‌ர்க‌ள் அருகில் வெடித்தது. இதில் 5 காவல‌ர்க‌ள் படுகாயம் அடைந்தனர்.


இது குறித்து ‌விசாரணை விசாரணை நடத்தி வருகி‌ன்றன‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts