background img

புதிய வரவு

புத்த மடத் தாக்குதல்: பெரியார் தி.க.வினர் 7 பேர் கைது

சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு இத்தாக்குதல் நடந்தது. அதில் அங்கிருந்த ஒரிரு புத்த புக்குகள் உட்பட சிலர் காயமுற்றனர். இத்தாக்குதல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் விசாரணையில் இருந்தனர். இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விவரம் எதிர்பார்க்கப்படுகிறது...

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts