background img

புதிய வரவு

சட்டசபை தேர்தலை "மனதில்' வைத்து ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

எஸ்.பி., மற்றும் டி.ஐ.ஜி., பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பணியிடம் ஒதுக்கப்பட உள்ளது. அவர்களில், சட்டம் ஒழுங்கு பணியிடம் இல்லாத, "நான் சென்சிடிவ்' இடத்தில் இருப்பவர்களை, அந்த இடத்திலயே பதவி உயர்வு அளித்து பணியமர்த்தும் திட்டமும் உள்ளதாக தெரிகிறது.


தமிழகத்தில் சமீபத்தில், ஐ.ஜி., யாக இருந்த, எட்டு பேர் கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்த்தப்பட்டனர். அடுத்தபடியாக, பதவி உயர்வுக்காக டி.ஐ.ஜி., டூ ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., டூ டி.ஐ.ஜி., ரேங்கில் உள்ளவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்காக, அரசுத்துறையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம், கடந்த செவ்வாய் முடிவடைந்தது. அதில், பதவி உயர்வுக்காக காத்திருக்கும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, எந்தெந்த இடங்களை ஒதுக்கலாம் என, ஆலோசித்து இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. டில்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க, முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலர் மாலதி ஆகியோர் செல்கின்றனர். அவர்கள் சென்னை திரும்பிய பின், பதவி உயர்வு பட்டியல், "ரிலீஸ்' செய்யப்பட உள்ளது.


இதற்கிடையே, அரசில், "பவர் புல்லாக' இருக்கும் சில, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் புதிய இடங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனராக ஸ்ரீதர் உள்ளார். அவரை இணை கமிஷனராக நியமித்து, அவருக்கு கீழ் மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு, தலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவுகள் கூடுதலாக கொடுக்கப்படும் என தெரிகிறது. மத்திய சென்னை இணை கமிஷனர் தாமரைக்கண்ணன், ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று, சி.பி.சி.ஐ.டி.,க்கு செல்ல உள்ளார். காலியாகவுள்ள அந்த இடத்தில், அடையாறு துணை கமிஷனராக உள்ள சாரங்கன் உட்பட, அவரது, "பேட்ஜ்' அதிகாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் ஒழுங்கை தவிர, "நான் சென்சிடிவ்' பணியிடத்தில் உள்ளவர்களை, அவர்கள் பணியாற்றும் இடத்திலேயே பதவி உயர்வு அளித்து நியமிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.


டி.ஐ.ஜி., டூ ஐ.ஜி.,பதவி உயர்வு லிஸ்ட்: நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக 1993ம் ஆண்டு பேட்ஜில் தேர்வாகி, டி.ஐ.ஜி., யாக, அசோக்குமார்தாஸ், சைலேஷ்குமார் யாதவ் உள்ளனர். இதே பேட்ஜில், நேரடி டி.எஸ்.பி.,யாக தேர்வாகி, பதவி உயர்வில் டி.ஐ.ஜி.,யாக உள்ள ஆறுமுகம், மாசானமுத்து, கண்ணப்பன், அருணாச்சலம், பாலசுப்பிரமணி, தாமரைக் கண்ணன் ஆகியோர் விரைவில் ஐ.ஜி.,யாக பதவி உயர்த்தப்பட உள்ளனர். இந்த, "லிஸ்ட்' ரெடியாகி வருகிறது.


எஸ்.பி., டூ டி.ஐ.ஜி.,பதவி உயர்வு லிஸ்ட்: தமிழக நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக 1997ம் ஆண்டு தேர்வாகி, துணை போலீஸ் கமிஷனராக ஆயிஷ்மணி திவாரி, மகேஷ்வர் தியாள், சுமித் சரன், அபின் தினேஷ் மோடக், சஞ்சய்குமார் உள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் மத்திய அரசு பணியில் உள்ளதால், அங்கேயே டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்த்தப்பட உள்ளனர். இதே பேட்ஜில் குரூப்-1(நேரடி டி.எஸ்.பி.,) அதிகாரிகளாக தேர்வாகி, துணை போலீஸ் கமிஷனராக உள்ள பெரியய்யா, மவுரியா, பாரி, செந்தாமரை கண்ணன், சத்தியமூர்த்தி, ஸ்ரீதர், முருகன், வரதராஜு, சாரங்கன் ஆகிய ஒன்பது பேரும் தமிழக சர்வீசில் உள்ளனர். முக்கிய இடங்களை பிடிக்க இவர்களுக்குள் ஒரு சில அதிகாரிகள் இப்போதே, "பிடிக்க வேண்டியவர்களை பிடித்து' "துண்டு' போட்டு வைத்துள்ளனர். சி.பி.ஐ., எஸ்.பி.,யாக முருகன் இருப்பதால், இந்த போட்டியில் இருந்து அவர் ஒதுங்கியுள்ளார். "பின்னணி' இல்லாத அதிகாரிகள், எங்கு பணியமர்த்தப்பட்டாலும், அங்கு செல்ல தயாராக உள்ளதாக தெரிகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts