காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்று ஒருபோதும் கூறவில்லை என தெரிவித்துள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, விஜயகாந்தின்தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து எதுவும் கூறவிரும்பவில்லை என்றார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகுசெய்தியாளர்களிடம் ஜெயலலிதா, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில்தி.மு.க ஆட்சியின் அவலங்களையும், மக்கள் விரோதச் செயல்களையும்முன்னிறுத்தி அ.இ.அ.தி.மு.க பிரசாரம் செய்யும் என்றார்.
அரசின் இலவச திட்டங்கள் பெரும்பாலான மக்களைச் சென்றடையவில்லைஎன்றும் அதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என்றும் அவர் குற்றம்சாற்றியுள்ளார்.
இலவசத் திட்டங்கள் மக்களிடம் எடுபடாது என்று கூறியுள்ள ஜெயலலிதா,வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க தோற்கப்போவது உறுதி என்றார்.
0 comments :
Post a Comment