ஏழைகளுக்கு குறைந்த விலையிலும்,பணக்காரர்களுக்கு கூடுதல் விலையிலும்பெட்ரோலிய பொருள்களின் விலையைநிர்ணயிக்க வேண்டும் என்று தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டஅறிக்கையில், எதிர்பாராத அளவுக்குபெட்ரோலிய பொருள்களின் விலையை மத்தியஅரசு உயர்த்தி வருவது தொடர்கதையாகிவிட்டது என்று குற்றம்சாற்றியுள்ளார்.
விலைவாசி உயர்வுக்கு பெட்ரோலியபொருள்களின் விலை உயர்வும் முக்கிய காரணம் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டேசெல்வதால் விலையை உயர்த்த வேண்டியுள்ளது என்று மத்திய அரசு விளக்கம் தருவதாக கூறியுள்ள விஜயகாந்த், வரி அதிகமாக விதிக்கப்படுவதால் பெட்ரோலியபொருள்களின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் மத்திய, மாநில அரசுகளுக்குகூடுதல் வருமானம் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூடுதல் வருமானத்தை விட்டுக் கொடுத்து வரியை ஒரே நிலையில்வைத்திருந்தால் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை ரூ.100 என்றால் அதில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிரூ. 52 ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏழை, நடுத்தர மக்களின் அத்தியாவசியப் பயணங்களுக்கு குறைந்தவிலையிலும், ஆடம்பர வாகனங்களைப் பயன்படுத்தும் பணக்காரர்களுக்குகூடுதல் விலையிலும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயிக்கவேண்டும் என்றும் விஜயகாந்த் யோசனை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment