தேவையானவை:
மக்காச்சோளம் (பச்சை) - 2 கப்
பால் - 8 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 12 மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு துண்டுகள்
செய்முறை:
நெய்யை வாணலியில் ஊற்றி சூடேறியதும் மக்காச்சோளத்தைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
பாலில் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் 4 கப்பாக சுண்டும் வரை வைக்கவும்.
பின்னர் அந்தப் பாலில் மக்காச்சோளத்தைச் சேர்த்து அரைக்கவும். பிறகு முந்திரிப் பருப்பு, கசகசாவையும் சேர்க்கவும்.
அதன்பிறகு தொடர்ந்து கிளறவும். தகுந்த பதம் வந்ததும் ஒரு நெய் பூசிய தட்டில் கொட்டி சமமாகப் பரப்பவும்.
சுத்தமான ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கத்தியால் விருப்பமான அளவுகளில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
சத்தான மக்காச்சோள பர்ஃபி தயார். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
0 comments :
Post a Comment