முதலமைச்சர் கருணாநிதியை அவரதுஇல்லத்தில் மத்திய நாடாளுமன்றவிவகாரங்கள் துறை இணை அமைச்சர்நாராயணசாமி இன்று சந்தித்து பேசினார்.
சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயர் வைக்கப்படும் என்று அறிவித்தற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, அண்மையில் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வையடுத்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க நாராயணசாமி மறுத்து விட்டார்.
தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சென்னையில் அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதைப்போல் தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக கூறினார்.
சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயர் வைக்கப்படும் என்று அறிவித்தற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, அண்மையில் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வையடுத்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க நாராயணசாமி மறுத்து விட்டார்.
தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சென்னையில் அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதைப்போல் தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக கூறினார்.
0 comments :
Post a Comment