background img

புதிய வரவு

பனீர் புலாவ்

தேவையானவை:


பாசுமதி அரிசி - 1 கப்
பனீர்த் துண்டுகள் - 1 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
பச்சை மிளகாய் - 3
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:


அரிசியை சுத்தப்படுத்தி 15 நிமிடம் ஊற வைக்கவும்.


வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பட்டையை போட்டு பொரிக்கவும்.


பிறகு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.


தண்ணீர் வடித்த அரிசியை இதனுடன் சேர்த்து லேசாக வதக்கி 2 கப் தண்ணிர் ஊற்றவும்.


தேவையான உப்பு சேர்த்து உதிரிப் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும்.


பனீர்த் துண்டுகளை லேசாக இளஞ்சூட்டில் நெய்யில் பொரித்து நெய்யுடன் சாதத்தில் கொட்டி கலக்கவும்.


நெய் வேண்டாம் என்று நினைப்பவர்கள், பனீர்த் துண்டுகளை பொடியாக்கி சூடான சாதத்தில் கலந்து கொத்துமல்லி தூவி 10 நிமிடம் மூடி வைக்கவும்.


பச்சடியுடன் சேர்த்து பரிமாறலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts