background img

புதிய வரவு

போலியோ சொட்டு மருந்து: கருணா‌நி‌தி தொட‌ங்‌கி வை‌த்தா‌ர்

போ‌லியோ சொ‌ட்டு மரு‌ந்து வழ‌ங்கு‌ம் ‌தி‌ட்ட‌த்தை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தொட‌ங்‌கி வை‌த்தா‌ர்.


கோபாலபுர‌த்‌தி‌ல் உ‌ள்ள தனது ‌வீ‌ட்டி‌ல் இ‌ன்று அவ‌ர் இ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை தொட‌ங்‌கி வை‌த்தா‌ர்.


தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்குள்பட்ட 70 ல‌ட்ச‌ம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இ‌ன்று வழங்கப்ப‌ட்டு வரு‌கிறது.


மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேரு‌ந்து, இரயில், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு குழ‌ந்தைகளு‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.


தமிழகம் முழவதும் 40 ஆயிரத்து 399 மையங்களில் சுமார் 2 லட்சம் பேர் இந்தப் பணியில் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.


செ‌ன்னை‌யி‌ல் ம‌ட்டு‌ம் 5 ல‌ட்ச‌ம் குழ‌ந்தைகளு‌க்கு போ‌லியோ சொ‌ட்டு மரு‌ந்து வழ‌ங்க மாநகரா‌ட்ச‌ி ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ளது.


இரண்டாம் தவணையாக பிப்ரவரி 27ஆம் தேதியும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படு‌கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts