background img

புதிய வரவு

ஆடுகளத்தை தாக்கும் சுனாமி

இப்படியே போனால் மௌனப் படம் மட்டும்தான் எடுக்க முடியும்போல. 

எப்படி வசனம் எழுதினாலும், இது எங்களை கேவலப்படுத்துது என்று முண்டாதட்ட ஒருசிலர் இருக்கதான் செய்கிறார்கள். ஆடுகளம் படமும் இதற்கு பலியாகியுள்ளது.

பயத்தைப் பற்றி இந்தப் படத்தில் பேசும் தனுஷ், பயமா... எனக்கா... நாங்க சுனாமியிலேயே ஸ்விம்மிங்கை போடுறவங்க என்பார். சும்மா ரைமிங்காக எழுதப்பட்ட வசனம். 

இது சுனாமியால் வீடு, வாசல், உறவுகளை இழந்த எங்களை அவமானப்படுத்துகிறது என மீனவ அமைப்புகள் கூட்டம் போட்டு கொதிப்பை காட்டியிருக்கின்றன. 

மேலும் குறிப்பிட்ட வசனத்தை உடனே நீக்க வேண்டும் என்று கோ‌ரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts