மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தான் கூறவில்லை என்றுகூறியுள்ள மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, 2 ஜிஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசா மீதுதி.மு.க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தான் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி செல்வதற்காக சென்னை விமானநிலையம் வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராஜினாமா செய்வதாக வெளியான தகவல்களுக்குதி.மு.க தலைவர் கருணாநிதி ஏற்கனவே பதிலளித்துவிட்டார் என்றார்.கட்சிப் பதவி கேட்டு பழக்கமில்லை என்று கூறிய அழகிரி, கட்சியில் எந்தப்பதவி கொடுத்தாலும், அதை ஏற்றுக்கொண்டு, திறமையாகப்பணியாற்றுவேன் என்றார்.
மத்திய அமைச்சரவையில் தி.மு.க சார்பில் யாராவது சேர்க்கப்படுவார்களாஎன்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அமைச்சர் பதவி குறித்து பேச நான்என்ன பிரதமரா என்று வினவினார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசாமீது தி.மு.க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தான் கேட்கவில்லைஎன்றும் அழகிரி கூறினார்.
0 comments :
Post a Comment