background img

புதிய வரவு

உத்தரபிரதேசம்: குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

உத்தரபிரதேசத்தில் குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. 

வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கடும் குளிர் வீசி வருகிறது. கடந்த சில தினங்களக குளிர் உச்சகட்ட அளவில் இருந்தது. அனைத்து பகுதிகளிலும் 5 டிகிரிக்கும் குறைவாகவே வெப்ப நிலை இருந்தது. 

அதிலும் உத்தரபிரதேசத்தில் கடும் குளிர் வீசி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் குளிருக்கு நேற்று மேலும் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை104 ஆக உயர்ந்துள்ளது. 

கடும் குளிரினால் ஏற்கனவே மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. 
இப்போது மேலும் ஒரு வாரத்துக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts