background img

புதிய வரவு

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிஏஜிக்கு நீதிமன்றம் சம்மன்


ராசா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு தொடர்பாக சாட்சியம் அளிக்க வருமாறு மத்திய தலைமைக் கணக்காயர் (சிஏஜி) வினோத் ராய்க்கு டெல்லி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராசா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரதீப் சட்டா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிஏஜி வினோத் ராய், சிஏஜி இயக்குனர் ஆர்.பி.சிங் ஆகியோர் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என அழைப்பாணை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts