background img

புதிய வரவு

கர்நாடகாவில் பா.ஜனதா நடத்தும் போராட்டம் ஏற்புடையதல்ல: ப..சிதம்பரம்


முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்தது சட்டப்படி சரியானதுதான் என்றும், இதனை எதிர்த்து கர்நாடகாவில் பா.ஜனதாவினர் நடத்தும் போராட்டம் ஏற்புடையதல்ல என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ள அவர், ஆளுநரின் முடிவுக்கு எதிராக பா.ஜனதாவினர் வீதியில் இறங்கி போராடுவது ஏற்கத்தக்கதல்ல என்றும், மாநில அரசும், கர்நாடக அரசாங்கமும் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.

ஒரு முதலமைச்சர் அல்லது மாநில அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிப்பது இது முதன்முறையல்ல என்றும், இது விடயத்தில் சட்டம் தெளிவாகவே உள்ளது என்றும் அந்த் அறிக்கையில் சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts