background img

புதிய வரவு

பால்தாக்கரே பிறந்த நாள் கூட்டத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம்


நாளை நடைபெற உள்ள தமது பிறந்த நாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியின்போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார்.

தமது கட்சி பத்திரிகையான 'சாம்னா' வில் எழுதியுள்ள கட்டுரையில் இதனைக் கூறியுள்ள அவர், தமது பிறந்த நாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியையொட்டி கூடும் கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் போன்று ஒரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து மும்பை காவல்துறை இணை ஆணையாளர் தங்களுக்கு தகவல் தெரிவித்ததாக சிவசேனா பேச்சாளர் சஞ்சய் ராவத் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts