background img

புதிய வரவு

உயர்மட்ட பேச்சுவார்த்தை: இந்தியா வருகிறார் ஹில்லாரி


உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் வருகிற ஏப்ரல் மாத வாக்கில் இந்தியா வருவார் எனத் தெரிகிறது. 

ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டில் இந்தியா வந்த ஹில்லாரி தலைமையிலான அமெரிக்க உயர்மட்டக் குழு, இந்திய அரசுடன் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்திச் சென்றது. 

இந்நிலையில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஹில்லாரி தலைமையிலான குழு அநேகமாக வருகிற ஏப்ரல் மாதம் இந்தியா செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கா அயலுறவுத் துறைச் செயலர் ராபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். 

ஹில்லாரி இந்தியா செல்லும் துல்லியமான தேதி மற்றும் இதர பயண விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts