background img

புதிய வரவு

மும்பை: குப்பையில் வெடிபொருட்களை பதுக்கி வைத்த 5 பேர் கைது


மும்பை அருகே நிலத்தகராறில் எதிரியை பழி வாங்குவதற்காக அவரது வீட்டருகே குப்பைத் தொட்டிக்குள் வெடிபொருட்களை பதுக்கிவைத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

மும்பை புறநகர் பகுதியான மலாட் என்ற இடத்தை சேர்ந்த சலீம் கான் என்பவருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே நிலத் தகராறு இருந்துவந்தது. 

இதனையடுத்து சலீம் கானை பழிவாங்கும் எண்ணத்தில் அவரை தீவிரவாதி போல் காட்டி காவல்துறையிடம் மாட்டிவிட அவரது உறவினர்கள் சதித் திட்டம் தீட்டினர். 

இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடிமருந்து, பால்பேரிங்குகள், காரின் நட்டுகள் மற்றும் போல்ட்டுகள் ஆகியவை அடங்கிய பை ஒன்றை மர்ம நபர்கள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று போட்டுவிட்டு சென்றுவிட்டனர். 

இந்நிலையில் குப்பைத் தொட்டியில் வெடிபொருட்கள் கிடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, அதனை கைப்பற்றினர். 

பின்னர் அருகிலுள்ள வீடு உரிமையாளரான சலீம் கானிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவருக்கும் அவரது உறவினர்களுக்கும் நிலத்தகராறு இருந்துவந்ததும், அவரை பழிவாங்க இந்த சதி நடந்திருப்பதும் தெரியவந்தது. 

இதனையடுத்து இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts