background img

புதிய வரவு

தெலங்கானா காங். எம்.பி.க்களுக்கு டெல்லி மேலிடம் அழைப்பு

தெலங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு டெல்லி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆந்திராவில் தெலங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் ஹைதராபாத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அதில், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் எம்.பி.யுமான கேசவ் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, `ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்ட 5 ஆவது பரிந்துரையின்படி ஹைதராபாத்தை தலைநகராக கொண்ட தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. 

இந்த சூழ்நிலையில், தெலங்கானா பகுதியை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவருக்கும் காங்கிரஸ் மேலிடம் சார்பாக இன்று தாக்கீது அனுப்பப்பட்டது. 

அதில், தெலங்கானா எம்.பி.க்கள் அனைவரும் உடனடியாக டெல்லிக்கு வர வேண்டும் என்றும், நாளை டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts