background img

புதிய வரவு

ஸ்பெக்ட்ரம் குறித்த சிஏஜி அறிக்கையை அவமதிக்கவில்லை: கபில் சிபல் பல்டி


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை (சிஏஜி) அளித்த அறிக்கையை தாம் அவமதிக்கவில்லை என்று மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சர் கபில் சிபல் பல்டியடித்துள்ளார். 

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கபில் சிபல், இந்த அறிக்கை தவறானது என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கபில் சிபல் கருத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 

தன்னுடைய பொறுப்பை துளி கூட உணராமல் செயல்படும் அமைச்சரின் செயல்பாடு மிகவும் துரதிஷ்டவசமானது என்று கூறிய நீதிபதிகள், தனிப்பட்ட எவர் ஒருவருடைய தலையீட்டுக்கும் அடிபணியாது சி.பி.ஐ. தனது புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தனர். 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தை தொடர்ந்து, கபில் சிபல் சிஏஜி அறிக்கை தொடர்பான தமது நிலையிலிருந்து பல்டியடித்துள்ளார். 

இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஏஜி அறிக்கையை தாம் எந்தவிதத்திலும் அவமதிக்கவில்லை என்றும், ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையிலும் தாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாக்வோ தலையிடவில்லை என்றார். 

அதே சமயம 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts